ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் விற்கப்படு கிறது. ஆனால், சிலர் போலி டிக்கெட் அச்சிட்டு, அதனை 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பதாக தெரிய வந்ததை அடுத்து, திருப்பதி லட்டு கவுண்ட்டர் ஒப்பந்த ஊழியர் அருண், இடைத்தரகர்கள் பாலாஜி, செங்காரெட்டி உள்ளிட்ட 7 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.