states

img

சொல்வதெல்லாம் உண்மையில்லை! - ராஜகுரு

பிரதமர் மோடி: மித்ரோன்...!  தீவிரவாதத்தை ஒழிப்ப தில் நாம் முனைப்பு காட்ட வேண்டும். அதற்கு முதலில்  என்ன செய்ய வேண்டும்? ஒரு புதிய கோஷம் தயார் செய்ய  வேண்டும். “நக்சல் நஹீம்.. நக்சல் நஹீம்”  என்பதுதான் நான் தரும் கோஷம்.  தீவிரவாதம் என்று நானோ பரிவாரத்தினரோ சொன் னால் அதற்கு முஸ்லிம் தீவிரவாதம் என்று மட்டுமே அர்த்தம். அது இந்த உலகத்திற்கே தெரியும். எங்களது நடவடிக்கைகள் தீவிரவாதத்தின் கீழ் வரமாட்டா..     இந்தியாவின் ஒற்றுமையையும் பன்முகத் தன்மையை யும் பாய்ச்சல் வேக பொருளாதார வளர்ச்சியையும் கண்டு  எதிரி நாடுகள் கலங்கிப் போயிருக்கின்றன. உள் நாட்டு எதிரி களும்தான்!  பொய்ச் செய்திகளைப் பரப்பி நம் நாட்டில் சட்டம்  ஒழுங்குப் பிரச்சனைகளை உருவாக்க எதிரி நாட்டினரும்  உள்நாட்டு எதிரிகளும் முயற்சி செய்து கொண்டிருக்கி றார்கள். பொய்ச் செய்திகளைப் பரப்பும் உரிமை எங்க ளுக்கு மட்டுமே உண்டு. எதிரிகள் பரப்பும் பொய்ச் செய்தி கள் வளர்ச்சிக்கு எதிரானவை. நாங்கள் பரப்பும் பொய்ச்  செய்திகள் சாதி, மதக் கலவரங்களை உருவாக்கி நாட்டை சுத்தப்படுத்தக் கூடியவை.. இரண்டிற்கும் உள்ள வித்தி யாசத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தேசபக்தர்  களாக இருந்தால் புரிந்து கொள்வார்கள்.

121 நாடுகளுக்கான பட்டினிக் குறியீட்டில் இந்தியா வுக்கு 107-வது இடமாம்!  யாரிடம் கதை விடுகிறார்கள்? பசியை நாட்டிலிருந்து அறவே ஒழித்து நாம் சாதனை படைத்திருக்கிறோம். 2014-ஆம் ஆண்டிற்கு முந்தைய புள்ளி விவரங்களைக் கொடுத்து நம்மை ஏமாற்றப் பார்க்கி றார்கள். யாரும் நம்ப வேண்டாம் !  டிஜிட்டல் உலகில் நாம் போகும் வேகத்தைப் பார்த்து உலக நாடுகள் வாயடைத்துப் போயிருக்கின்றன. வரும் தேர்தல்களில் மக்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பது தேர்தல் கமிஷனுக்குத் தெரிவதற்கு முன்பாகவே எங்களுக்குத் தெரிந்துவிடும்! இந்த விஷயம் மக்களுக்குத் தெரியும் வகையில் எங்கள் பிரச்சாரம் இருக்கும். அவர்கள் மிரண்டுபோய் எங்களுக்கு வாக்களிப்பார்கள்!  தேர்தல் நடக்கும் மாநிலங்களில் பல்வேறு திட்டங்க ளுக்கு அடிக்கல் நாட்டிக் கொண்டே போவேன்… எளியோ ருக்கு வீடு கொடுக்கும் கிரகப் பிரவேச நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டே போவேன்.. எதிர்க்கட்சிகள் என்ன  செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கின்றன... ஒரே நாடு.. ஒரே மொழி.. ஒரே ரேசன் கார்டு வரிசையில்  வருகிறது போலீசாருக்கு ஒரே உடை கலாச்சாரம்.. வேறெ தையெல்லாம் இந்த ஒரே லிஸ்டில் கொண்டுவரலாம் என்று  130 கோடி மக்களும் எனக்கு ட்விட்டர் அனுப்பலாம். சிறந்த யோசனைக்கு பரிசுகள் உண்டு! 

அமித் ஷா: வல்லபாய் பட்டேலை நாட்டின் முதல் பிரதமர்  ஆகத் தேர்வு செய்திருக்க வேண்டும். காந்தி, நேரு செய்த  மாபெரும் தவறின் பலனை நாடு அனுபவித்துக் கொண்டி ருக்கிறது. 1950-ஆம் ஆண்டிலேயே பட்டேல் காலமாகி விட்டாரே என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. நாங்க  விடற ஜும்லாவிலே அது ஒண்ணு.. சீரியசா எடுத்துக்கா தீங்க!  ஜம்மு- காஷ்மீரில் மக்கள் சுதந்திரக் காற்றை அனு பவிக்க முடியவில்லை.. பத்திரிகை சுதந்திரம், பேச்சு  சுதந்திரம் ஆகியவை  பேராபத்தில் சிக்கிக் கொண்டுள்ளன என்று குப்கார் கூட்டணி மப்கார் கூட்டணி என்று பெயரை வைத்துக் கொண்டு பொய்ப் பிரச்சாரம் செய்து வரு கிறார்கள். பிரிவு 370-ஐ நீக்கிய பிறகுதான் பாகிஸ்தான் ஆத ரவு பயங்கரவாதிகளிடமிருந்து தாக்குதல்கள் நடக்காமல்  மக்கள் அச்சமின்றி நடமாடி வருகின்றனர். மோகன் பாக வத் மீது சத்தியமாக நான் சொல்வது உண்மை !     

ஆர்.என்.ரவி: எந்த ஒரு நாடும் மதத்தைச் சார்ந்து தான் இயங்க முடியும். 195 நாடுகளில் 30 நாடுகள்தான் மதச்சார்புடையவை.. 120-க்கும் மேற்பட்ட நாடுகள் மதச்சார்பற்றவை என்று எனக்குத் தெரியும். ஆனாலும் நான் ஆர்.எஸ்.எஸ். தத்துவத்தை வளர்க்க பொய் பேசித்  தானே ஆக வேண்டும்?  கோவை கார் வெடிப்பு சம்பவத்தை என்.ஐ.ஏ.-வுக்கு  பரிந்துரைக்க ஸ்டாலின் நான்கு நாட்கள் எடுத்துக் கொண் டது ஏன்? இதைக் கேட்டால், சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களை நான் மாதக்கணக்கில் கிடப்பில் போடுவது ஏன் என்று கேட்டு திமுகவும் அதன்  கூட்டணிக் கட்சிகளும் அரசியல் செய்கின்றன. என்னை  ஆளுநர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று குடி யரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பப் போகிறார்களாம். எனக்கு சிரிப்புதான் வருகிறது!  

அண்ணாமலை: சதிகாரர்கள் மக்களை மதத்தால் பிளவுபடுத்த நினைத்தாலும் அவர்கள் இந்த விஷ யத்தில் எங்களோடு போட்டி போட முடியாது. கார் வெடிப்பு நிகழ்ச்சியில் கோவை ஏன் அமைதியாக இருக்கிறது என்பது மட்டுமே என் கேள்வி. கலவரம் நடக்காவிட்டால் எங்கள் பிழைப்பு என்ன ஆவது? பத்திரிகையாளர்களை அன்றாடம் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவர்களைப் பார்த்து குரங்குகள் என்று நான் திட்டுவேனா? குரங்குகள் மாதிரி தாவ வேண்  டாம் என்று மட்டுமே சொன்னேன். நான் சொன்னதைத் தவறாகத் திருத்திச் சொன்னால் தமிழ்நாடு கலவர பூமி யாகும் ஜாக்கிரதை.. !    அரவிந்த் கெஜ்ரிவால் எங்கள் வழிக்கு வந்துவிட்டார். ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தோடு லட்சுமி, விநா யகர் படங்களை அச்சிட்டால் இந்தியா செல்வம் கொழிக்  கும் நாடாக மாறும் என்று உபதேசம் செய்யத் தொடங்கி விட்டார். இந்துத்துவாவைப் பரப்புவதில் எங்களோடு போட்டி போட வேண்டும் என்று நினைக்கும் அளவு அப்  பாவியாக அவர் இருக்கிறார். தேசிய அளவில் இவர் எங்க ளுக்குப் போட்டியாளராம்!