‘பனாமா பேப்பர்ஸ்’ ஆவணங்கள் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவனங்க ளுடன் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை மேற்கொண்டது தொடர்பாக, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்ய ராய் பச்சன் ஆகியோரிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அண்மையில் விசா ரணை நடத்தினர். இதன் அடுத்தகட்டமாக அமிதாப் பச்சனையும் விசாரிக்கத் திட்ட மிட்டுள்ளதாக அமலாக்கத்துறை வட்டா ரங்கள் தெரிவித்துள்ளன.