states

img

மம்தா மருமகனுக்கும் அமலாக்கத்துறை சம்மன்

மக்களவைத் தேர்தல் நெருங்கி யுள்ள நிலையில், வருமான வரித் துறை, சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய அமைப்புகள் பாஜக  அல்லாத எதிர்க் கட்சி  கள் ஆளும் மாநி லங்களில் சோத னைகள் என்ற பெய ரில் சுற்றி திரிகின் றன.  இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செய லாளரும், மேற்கு வங்க முதல்வரின் மரு மகனுமான அபிஷேக் பானர்ஜி, பள்ளி  ஆசிரியர் நியமன ஊழல் வழக்கு தொடர்  பாக நவம்பர் 9 அன்று கொல்கத்தாவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத் தில் நேரில் ஆஜராகுமாறு, சம்மன் அனுப்பி  யுள்ளது. ஏற்கெனவே இதே ஆசிரியர் நிய மன ஊழல் வழக்கு தொடர்பாக அபிஷேக்  பானர்ஜி கடந்த செப்டம்பர் 13 அன்று  சுமார் 9 மணிநேரம் அமலாக்கத்துறை யால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.  நிலக்கரி ஊழல் வழக்கில் 2021-இல் தில்லி யில் ஒரு முறையும், 2022இல் கொல்கத்தா வில் இரண்டு முறை அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார் என்பது குறிப்  பிடத்தக்கது.