states

img

ராணுவத்தில் ஜாதி அடிப்படையிலான படைப் பிரிவுகளை ஒழிக்க வேண்டும்!

புதுதில்லி, பிப்.8- இந்திய ராணுவத்தில் சாதி அடிப்ப டையிலான அனைத்து படைப் பிரிவு களையும் ஒழிக்க வேண்டும் என சமாஜ் வாதி கட்சி எம்.பி. சவுதாரி சுக்ராம் சிங் யாதவ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மாநிலங்களவை யில் அவர் பேசியிருப்பதாவது: பாகிஸ்தான், சீனா உடனான போர் களின்போது யாதவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எண்ணிலடங்கா வீர  தீரச் செயல்களில் ஈடுபட்டதற்கு நீண்ட கதைகள் உள்ளன. இந்தச் சமூ கத்தைச் சேர்ந்தவர்கள், வீர தீரச் செயல்களுக்காக பல விருதுகளை பெற்றுள்ளனர். எனினும் அவர் களுக்கு ராணுவத்தில் தனிப் படைப் பிரிவு இல்லை. இந்திய ராணுவத்தில் ஜாட் ரெஜிமெண்ட், ராஜ்புத் ரெஜிமெண்ட், சீக்கிய ரெஜிமெண்ட் போன்றவை இருக்கும் போது, யாதவர்கள்  இடம்பெற்றுள்ள அஹிர் ரெஜிமெண்ட் ஏன் உருவாக்கப்படவில்லை? என்று அடிக்கடி விவாதிக்கப்படுகிறது. எனவே, யாதவ் சமூகம் பல துணிச் சலான விருதுகளைப் பெற்றுள்ள சூழ லில், மற்ற படைப்பிரிவுகளைப் போலவே, இந்திய ராணுவத்தில் அஹிர் படைப்பிரிவையும் உருவாக்க வேண்டும். இல்லையெனில் இந்தப்  பாரம்பரியத்திற்கு முடிவுகட்டும் வகையில், சாதி அடிப்படையிலான அனைத்துப் படைப்பிரிவுகளையும் ஒழித்துக் கட்ட வேண்டும். சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை, குறிப்பாக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் கணக்கெடுப்பை அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு சவுதாரி சுக்ராம் சிங் யாதவ் பேசியுள்ளார்.