‘‘ரயில் தடங்களில் உள்ள எலக்ட்ரானிக் சிக்னல்க ளில் கணிசமானவை பழுதடைந்து செயல்படாமல் உள்ளன. ஒவ்வோர் ஆண்டும் சுமார் 200 சிக்னல்கள் பழுதாகின்றன என்றால் 100 சிக்னல்கள் தான் புதுப் பிக்கப்படுகின்றன. இப்படியே ஒவ்வோர் ஆண்டும் செய் வதால் புதுப்பிக்கப்படாத சிக்னல்களின் எண்ணிக்கை அதி கரிக்கிறது.இதற்குப் போதிய நிதியை அரசு ஒதுக்கு வதில்லை. இதேபோல், ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 4,500 கிலோமீட்டர் தூர தண்டவாளங்கள் பழுதுபட்டுவிடுகின் றன. ஆனால், ஒவ்வோர் ஆண்டும் 2500இல் இருந்து 3000 கிலோ மீட்டர் தூரம் வரை மட்டுமே தண்டவாளங் கள் புதுப்பிக்கப்படுகின்றன. இதனால் ரயில்கள் தண்ட வாளத்தில் இருந்து விலகிச் செல்வது அதிகரிக்கிறது என்று 2017இல் அப்போதைய ரயில்வே அமைச்சர் கூறினார். இதேபோல ரயில்கள் செல்லும் மேம்பாலங்கள் பல பழுதடைந்துள்ளன. அவற்றைச் சரி செய்து புதுப்பிக்க வேண்டிய தேவையும் உள்ளது. ரயில்வே துறைக்கு வருமானமாக நூறு ரூபாய் வருகிறதென்றால், செலவோ 107 ரூபாயாக உள்ளது. எனவே, வருமானத்தில் இருந்து பழுது பார்ப்புப் பணிக்கு எடுத்துச் செலவழிக்கும் நிலையில்லை.
ரயில்வே சிக்னல்களை சரி செய்யவேண்டும், தண்ட வாளங்களை சரி செய்ய வேண்டும் என்று சி.ஏ.ஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஒன்றிய அரசு கண்டு கொள்வதில்லை.இதேபோல், ரயில்வே யில் 3 லட்சத்துக்கும் மேல் காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படாததால் தற்போது பணியில் இருப்பவர்கள் அதிக நேரம் வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். எனவே, உடனடியாக ரயில்வே சிக்னல்கள், தண்ட வாளங்களை புதுப்பிக்கும் பணிகளைத் தொடங்கி இந்த ஆண்டே முடிக்க வேண்டும். ரயில்வேயில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும்.
தட்சிண ரயில்வே எம்பிளாயிஸ் யூனியன் தொழிற்சங்க
(DREU) தலைவர் ஆர்.இளங்கோவன்