பிரதமர் மோடி சத்தீஸ்கர் மாநில தேர் தல் பிரச்சாரத்தின்போது, கடந்த வாரம் 80 கோடி ஏழை மக்களுக்கு இலவச ரேஷன் திட்டமான பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட் டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு அரசு நீட்டிப்பதாக அறிவித்தார். ஒன்றிய அமைச் சரவை ஒப்புதல் அளிக்காமல் ஒரு திட் டத்தை நீட்டிப்பதாக பிரதமர் மோடி தானாக அறிவித்துள்ள நிலையில், இந்த விவகா ரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் நடவ டிக்கை எடுக்குமா? என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் ஜெய்ராம் ரமேஷ் கூறுகை யில்,“பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் நீட்டிப்பிற்கு ஒன்றிய அமைச்சரவை இன்னும் ஒப்பு தல் அளிக்கவே இல்லை. ஆனால் அதற்கு முன்னதாகவே பொதுவெளியில் மோடி அறிவித்து விட்டார். இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் நட வடிக்கை எடுக்குமா? மோடி தலைமையி லான பாஜக அரசில் ஒன்றிய அமைச்சர வைக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. முதலில் மோடி அறிவித்து விடுவார். பிறகு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளிக் கும் என்ற நிலை உள்ளது. கடந்த 2016 நவம்பர் 8 அன்று பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டமானது தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் 2013-இன் மாற்றியமைக்கப்பட்ட மறுவடிவமே ஆகும். இச்சட்டத்தை அன்று குஜராத் முதல்வராக இருந்த மோடி எதிர்த் தார். ஆனால் இப்போது அதே திட்டத்திற்கு மோடி ஐந்தாண்டு நீட்டிப்பு வழங்குவது அவரது பலவீனத்தை பிரதிபலிப்பதாகும். முக்கியமாக மோடியின் செயல்பாடுகள் அவர் எப்படி செயல்படுவார் என்பதற்கு இது ஒரு முக்கிய உதாரணமாகவும் உள் ளது” என்று தெரிவித்துள்ளார்.