states

சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் சாலை, வாகன பேரணி நடத்த தடை நீட்டிப்பு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு

புதுதில்லி, பிப்.6-  5 மாநில தேர்தல் பரப்புரை தீவிரமாக  நடைபெறும் நிலையில் சாலை மற்றும்  வாகன பேரணி நடத்த தடை நீடிக்கப் பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் இரவு 8 மணி  முதல் காலை 8 மணி வரை பரப்புரை செய் வதற்கான தடையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.  உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநில தேர்தலையொட்டி சட்டசபை தேர்த லுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடை பெற்று வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங் களாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. உத்தரகாண்டில் 70 சட்டசபை தொகு திகளுக்கும், கோவாவில் 40 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி 14ஆம் தேதியும், பஞ்சாப்பில் உள்ள 117 சட்டசபை தொகுதிகளுக்கு பிப்ரவரி 20 ஆம் தேதியும், மணிப்பூரில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கு பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங் களாக தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

 இதற்கிடையில் கொரோனா பரவல் காரணமாக தேர்தல் ஆணையம் பேரணிகள் மற்றும் பிரச்சாரத்திற்கு ஜனவரி 31 வரை தடை விதித்த நிலையில், இது பிப்ரவரி 11 வரை கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், 5 மாநில தேர்தல் பரப்புரை தீவிரமாக நடக்கும் நிலையில், சாலை மற்றும் வாகன பேரணி நடத்த தடை  நீட்டிக்கப்படுவதாக இந்திய தேர்தல் ஆணை யம் அறிவித்துள்ளது.  அரசியல் கட்சிகள் இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை பரப்புரை செய்வதற்கான தடையும் நீடிக்கப்பட்டுள்ளது. திறந்த வெளி மைதானத்தில் 30 சதவீத பார்வை யாளர்களுடன் கூட்டங்களை நடத்த தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.