states

இலவச திட்டங்களை வாக்குறுதிகளாக அறிவிப்பதை தடுக்க முடியாது!

புதுதில்லி, ஏப்.9-   இலவச திட்டங்களை வாக்குறுதி களாக அறிவிப்பது கட்சிகளின் கொள்கை சார்ந்த முடிவு.  அரசியல் கட்சிகள் இலவச திட்டங்கள் அறி விப்பதை தடுக்க முடியாது; இலவச அறிவிப்புக்களை ஏற்பதும், நிராகரிப்ப தும் வாக்காளர்களின் முடிவுக்கு உட் பட்டது என்று உச்சநீதிமன்றத்தில் தேர் தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.  தேர்தலுக்கு முன் இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளின் அங்கீகாரத்தை  ரத்து செய்ய வேண்டும் என்றும், பொது மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு இலவச திட்டங்களை தேர்தல் வாக்கு றுதிகளாக அரசியல் கட்சிகள் அறிவிப்ப தற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், இலவசங்கள் அறிவிக்கும் கட்சிகளின் தேர்தல் சின்னங்களை கைப்பற்றவும் கடுமையான வழிகாட்டுதல்களை வெளியிடுமாறும் பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு கடந்த ஜனவரி மாதம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. “இது ஒரு தீவிரமான பிரச்சனை என்பதில் சந்தேகமில்லை. இலவசங்களுக்கான பட்ஜெட் வழக்கமான பட்ஜெட்டைத் தாண்டியதாகத் தெரிகிறது. சில சம யங்களில் இது சில கட்சிகளுக்கு சம மாக இருக்காது. இதை எப்படி நிர்வகிக்க லாம் அல்லது கட்டுப்படுத்துவது?” என தலைமைநீதிபதி கேள்வி எழுப்பினார்.  அப்போது எதிர்மனுதாரர்களான  ஒன்றிய அரசு  மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்புவ தாகக் கூறி வழக்கை ஒத்தி வைத்தது. இந்நிலையில்  இந்த வழக்கின் விசா ரணை ஏப்ரல் 9 அன்றும் மீண்டும் நடை பெற்றது.

அப்போது, தேர்தல் ஆணை யம் பதில் மனுவை தாக்கல் செய்தது. அதில், தேர்தலில் போட்டியிடும் கட்சி கள் தேர்தலுக்கு முன்னதாக இலவசங் களை அறிவித்து ஆட்சிக்கு வந்தவுடன்  அதனை செயல்படுத்துவது என்பது அர சியல் கட்சிகள் மற்றும் மாநில அரசு களின் கொள்கை முடிவு. அதில் தலை யிட இயலாது. அது தேர்தல் ஆணை யத்தின் அதிகாரத்துக்கு அப்பாற்பட் டது. தேர்தலுக்கு முன் இலவசங்கள் தரு வதாக வாக்குறுதி அளிக்கும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்யும் அதி காரமும் எங்களுக்கு இல்லை. அரசி யல் கட்சிகளின் கொள்கை முடிவுகளை தேர்தல் ஆணையம் முறைப்படுத்த முடி யாது என்றும் ஏற்கனவே தேர்தல் வாக்கு றுதிகளில் இலவசங்களை அறிவிப்பது குற்றமாகாது என்பதை 2013 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளது என்றும் இந்திய தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட் டுள்ளது.