புதுதில்லி,பிப்.8- 100 புதிய சைனிக் பள்ளி களில் மாணவர் சேர்க்கைக்கு இ-கவுன்சிலிங் நடத்தப்படும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிக்கை யில், நாடு முழுவதும் 100 புதிய சைனிக் பள்ளிகளை உருவாக்கும் அரசின் நோக்கத்தை செயல்படு த்தும் வகையில், இ-கவுன் சிலிங் எனப்படும் மின்னணு கலந்தாய்வை நடத்த சைனிக் பள்ளி சொசைட்டி தானியங்கி முறை ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. சைனிக் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க முதன்முறையாக இ-கவுன் சிலிங் முறை அறிமுகப் படுத்தப்படுகிறது. சைனிக் பள்ளி பாடத்திட்டத்துடன், தேசியக் கல்விக் கொள் கைக்கு ஏற்ற வகையில், நாடு முழுவதும் மாணவர் களுக்கு வாய்ப்பு வழங்கும் அரசின் கண்ணோட்டத்தின் ஒரு பகுதியாக, சைனிக் பள்ளிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இ-கவுன்சிலிங் பற்றி சைனிக் பள்ளி சொசைட்டி விரிவான விளம்பரம் செய்யத்திட்டமிட்டுள்ளது. சைனிக் பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்கள் www.sainikschool.ncog.gov.in என்ற வலை தளத்தில் பதிவு செய்து விவரங்களை அறிந்துகொள் ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர். மாணவர்கள் 10 பள்ளி களைத் தேர்வு செய்யலாம். மாணவர்களின் தரவரிசை அடிப்படையில், பள்ளிகள் ஒதுக்கப்படும். முடிவுகள் இ-கவுன்சிலிங் தளம் மூலம் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.