துவாரகா விரைவுச் சாலை ஹரி யானாவிலும் செல்லும் நிலை யில், இங்கு ஒரு கிலோ மீட்டர் சாலை அமைக்க ரூ. 251 கோடி செல விடப்பட்டிருப்பதாக சிஏஜி அறிக்கையில் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு இருந்தது. ஒரு கிலோ மீட்டருக்கு ரூ. 18.2 கோடி என்ற சராசரி செலவு எங்கே?.. ரூ.251 எங்கே..? என்றும் சிஏஜி கேட்டிருந்தார். இதேபோல அரசின் 7 திட்டங்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் முறை கேடுகளை சிஏஜி அம்பலப்படுத்தி இருந்தார். இந்நிலையில், துவாரகா விரைவுச் சாலை அமைக்கப்பட்டதில் முறைகேடு ஏதும் நடைபெறவில்லை. மாறாக, சிஏஜி-க்கு போதுமான தகவல்களை நெடுஞ்சாலைத் துறை அமைச்சகமும், தேசிய நெடுஞ்சாலைத் துறையும் வழங்காததே இந்த சர்ச்சைக்குக் காரணம் என மோடி அரசு விளக்கம் அளித்துள்ளது. ஊழல் புகார்களால், உயர்மட்டக் கூட்டத்தின் போது அமைச்சர் கட்காரி மிகுந்த வருத்தமடைந்ததாகவும், இதற் குக் காரணமானவர்கள் யாரோ அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதாகவும் ஒன்றிய அரசு வட் டாரங்கள் தெரிவித்துள்ளன.