states

img

நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவியேற்றார்

புதுதில்லி, ஜூலை 25- நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவ ராக திரௌபதி  முர்மு (64) திங்களன்று பதவியேற்றுக்கொண்டார். குடியரசுத் தலைவராக பதவியேற்றுள்ள முதல் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவர் முர்மு என்பது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் காலை 10.15 மணிக்கு நடைபெற்ற விழாவில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு தனது முதல் உரையை ஆற்றினார். நிகழ்வுக்கு முன்னதாக, பதவி விலகும் குடியரசுத் தலைவரும், தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத்தலை வரும் குதிரைப்படை வீரர்கள் புடைசூழ  நாடாளுமன்றம் வந்தடைந்தனர்.

குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பின் திரௌபதி முர்மு இந்தியில் ஆற்றிய உரையில் கூறியதாவது:  இந்தியாவின் மிக உயர்ந்த அரசிய லமைப்புப் பதவிக்கு என்னைத் தேர்ந் தெடுத்ததற்காக அனைத்து நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் அனைத்து குடிமக்களின் நம்பிக்கைகள், அபிலாஷைகள் மற்றும் உரிமைகளின் அடையாளமாகத் திகழும் இந்தப் புனிதமான நாடாளுமன்றத்தில் இருந்து அனைத்து குடிமக்களையும் நான் அன்புடன், பணிவுடன் வாழ்த்துகிறேன். உங்கள் பாசம், நம்பிக்கை மற்றும் ஆதரவு எனது செயல்பாடுகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றுவதற்கு எனக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும். சுதந்திர இந்தியாவில் பிறந்து, நாட்டின் குடியரசுத் தலைவர் ஆகியுள்ள முதல் நபர் நான்தான். நாடு 75-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடவுள்ளது. இந்தத் தரு ணத்தில் நான் குடியரசுத் தலைவராக தேர்வு  செய்யப்பட்டுள்ளேன். நாடு சுதந்திரம் அடைந்து 50-ஆவது ஆண்டை கொண்டா டும் போது எனது அரசியல் வாழ்க்கை தொடங்கியது. அது ஒரு தற்செயல் நிகழ்வு. 75-ஆவது சுதந்திரதினத்தில் எனக்கு  குடியரசுத் தலைவர் பொறுப்பு கிடைத்துள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நாம் வேகமாக  செயல்பட  வேண்டும்.

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா  தனது தொலைநோக்குப் பார்வையை நன வாக்குவதற்கு முழு வீச்சில் ஈடுபட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நேரத்தில் இந்தப் பொறுப்பு வழங்கப்படுவது எனக்கு கிடைத் துள்ள பெரும் பாக்கியம் ஆகும். அடுத்த  25 ஆண்டுகளில், நமது  இலக்குகளை அடை வதற்கு நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டும். அது நம் அனைவரின் கடமை. ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிய நமது புதிய வளர்ச்சிப் பயணத்தை,  கூட்டு முயற்சியால் சாதிக்க வேண்டும்.   ஜூலை 26-ஆம் தேதி கார்கில் விஜய் திவாஸ் கொண்டாடப்படுகிறது. இந்தத் தருணத்தில்  வீரர்களுக்கும், நாட்டு மக்க ளுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரி வித்துக் கொள்கிறேன். நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள ஒடிசாவில் உள்ள ஒரு சிறிய பழங்குடி கிராமத்திலிருந்து எனது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கினேன். தொடக்கக் கல்வி பெறுவது எனக்கு ஒரு  கனவாக இருந்தது. எத்தனையோ தடைகள்  இருந்தபோதும்  நான் மன உறுதியோடு கல்லூரிக்குச் சென்றேன். எனது கிராமத்திலிருந்து கல்லூரிக்குச் சென்ற முதல் பெண் நான் தான்.

ஜனநாயகத்தின் தாயகம் இந்தியா

பழங்குடி சமூகத்தை  சேர்ந்த வார்டு உறுப்பினராக இருந்து இந்திய குடியரசுத் தலைவராக உயரும் வாய்ப்பு பெற்றதை பெருமையாக கருதுகிறேன். இதுதான் ஜனநாயகத்தின் தாயகமாகத் திகழும் இந்தியாவின் மகத்துவம். ஒரு பழங்குடியினர் பகுதியில் ஏழை வீட்டில் பிறந்த நான் இந்தியாவின் மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவியை அடைய முடியும் என்பது நமது ஜனநாயகத்திற்கு கிடைத்த மரியாதை. நான் இந்தப் பொறுப்பிற்கு வந்தது எனது தனிப்பட்ட சாதனையல்ல, இது  இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஏழை யின் சாதனை. நாட்டில் உள்ள   ஏழை களின் கனவுகளை நிறைவேற்ற முடியும் என்பதற்கு எனது தேர்வு ஒரு சான்றாக அமைந்துள்ளது.

ஒதுக்கப்பட்டோர்-பலன் மறுக்கப்பட்டோரின் பிரதிபலிப்பு

பல நூற்றாண்டுகளாக ஒதுக்கப்பட்ட வர்கள், வளர்ச்சியின் பலன்கள் மறுக்கப் பட்டவர்கள், ஏழைகள், பட்டிய லினத்தவர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும்  பழங்குடியினர் ஆகியோரின் பிரதி பலிப்பை என்னுள் நான் உணர்கிறேன். இவர்களது நலன்களை பாதுகாப்பது தான் எனக்கு முதன்மைப் பணியாக இருக்கும்  என்பதை நாட்டு மக்கள் அனைவருக்கும்  குறிப்பாக  இளைஞர்களுக்கும் பெண் களுக்கும் உறுதியளிக்கிறேன். நாட்டின் இளைஞர்களின் உற்சாகத்தை யும் தன்னம்பிக்கையையும் நான் உன்னிப் பாக கவனித்து வருகிறேன். நாட்டின் இளை ஞர்கள் முன்னேறும் போது, அவர்கள்  தங்கள் தலைவிதியை தீர்மானிப்பது மட்டு மல்லாமல், நாட்டின் தலைவிதியையும் தீர்மானிக்கிறார்கள்,பல்லாயிரம் ஆண்டுகளாக இயற்கை யோடு இயைந்த பழங்குடி மரபில் பிறந்த வள் நான். என் வாழ்வில் காடுகள் மற்றும் நீர்நிலைகளின் முக்கியத்து வத்தை உணர்ந்துள்ளேன். இயற்கை யிலிருந்து தேவையான வளங்களை  எடுத்துக் கொண்டு, இயற்கைக்கு  மரியாதை செய்கிறோம். இயற்கை யை பாதுகாப்பது உலகளவில் இன்று  இன்றியமையாததாகிவிட்டது. சுற்றுச் சூழலை பாதுகாப்பதில் இந்தியா உலக நாடுகளுக்கு வழிகாட்டி வரு வது மகிழ்ச்சி அளிக்கிறது.

தேசத்தின் பெருமையை நிலைநாட்டிய ஆளுமைகள்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், நேரு, சர்தார் படேல், பாபாசாகேப் அம்பேத்கர், பகத்சிங், சுகதேவ், ராஜ குரு, சந்திரசேகர் ஆசாத் போன்ற எண்  ணற்ற ஆளுமைகள் தேசப் பெருமை யை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதை கற்றுக்கொடுத்துள்ளனர். ராணி லட்சுமி பாய், ராணி வேலு நாச்சியார், ராணி கெய்டின்லியு மற்றும் ராணி சென்னம்மா போன்ற பல துணிச்  சலான பெண்கள் தேசத்தைப் பாது காப்பதிலும் வளர்ச்சியிலும் பெண் சக்தியின் பங்களிப்பை புதிய உச்சத் திற்கு எடுத்துச் சென்றுள்ளனர் என்  பதை பெருமையோடு நினைவு கூர்கிறேன்.

சொந்த நலனைவிட  உலக நலன்

பொதுச் சேவை மூலம் தான் வாழ்க்  கையின் அர்த்தத்தை உணர்ந்தேன். புகழ்பெற்ற கவிஞரான பீம் போய் கவிதை வரியை மேற்கோள் காட்டு கிறேன், “மோ ஜீபன் பச்சே நர்கே படி  தௌ, ஜகதோ உத்தர் ஹேயு” - அதா வது, உலக நலனுக்காக பாடுபடுவது சொந்த நலன்களை விட மிகப் பெரி யது. உலக நலனுடன், மக்கள் அனை வரும் என் மீது வைத்துள்ள நம்பிக்கை யை நிலைநாட்ட முழு அர்ப்பணிப்புட னும் பணியாற்ற நான் எப்போதும் தயா ராக இருப்பேன். அரசியலமைப்பின் வெளிச்சத்தில், எனது கடமைகளை மிகுந்த நேர்மையுடன் நிறைவேற்று வேன்.  ஜனநாயகம், கலாச்சார இலட்சி யங்களை நிறைவேற்றுவேன். இவ்வாறு முர்மு பேசினார். நிகழ்வில் குடியரசுத் துணை தலை வரும் மாநிலங்களவைத் தலைவரு மான எம். வெங்கய்யா நாயுடு, பிரத மர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, அமைச்சர்கள், ஆளுநர்கள், முதலமைச்சர்கள், தூத ரகத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய ராணுவ அதிகாரிகள் விழாவில்  கலந்து கொண்டனர்.  தொடர்ந்து அவர் முப்  படைகளின் அணிவகுப்பு மரியாதை யை ஏற்றுக்கொண்டார். (பிஐபி)