இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘தங்கலான்’ பட ‘டீசர்’ வெளியீட்டு விழா சென்னை யில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விக்ரம் கூறியிருப்பது கவனிக்கத் தக்கதாக உள்ளது. “வரலா ற்றில் இருக்கும் நல்ல விஷ யங்களை கொண்டாட வேண்டும். ஆனால், கெட்ட விஷயங்களை மறக்க கூடாது. அது இனியும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்!” என்றார் அவர். “தங்கலான் படம் அந்தக் காலத்தில் வாழ்ந்த சமூகத்தினரின் வாழ்வியலைப் பேசு கிறது. ஆனால், இது நம்மை அழவைத்து சோகத்தை பிழியாமல் நிகழ்வுகளை யதார்த்தமாக பேசும் படைப்பாக இருக்கும். சில விஷயங்களை நாம் மறந்துவிடுகிறோம். அப்படி நாம் மறந்ததை இந்தப் படம் சித்தரித்திருக்கிறது. ரஞ்சித்துடன் பணியாற்றியது மிகச் சிறந்த அனுபவம். அவரின் ஒவ்வொரு ஃப்ரேமும் அழகாக இருக்கும். சிறப்பான இயக்குநர் ரஞ்சித். நீங்கள் கணிப்பதை தாண்டி இந்தப் படம் வேற மாதிரியான படமாக இருக்கும்!” என்றார்.