புதுதில்லி, மார்ச் 20- கம்யூனிஸ்ட் பெண்கள் இயக்கத்தின் வீராங்கனைகளில் ஒருவரும்,அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் நிறுவனத் தலைவர்களில் ஒருவருமான தோழர் மல்லு ஸ்வராஜ்யம் மறைவிற்கு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தன் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறது. இதுதொடர்பாக சங்கத்தின் தலைவர் மாலினி பட்டாச்சார்யா மற்றும் பொதுச் செய லாளர் மரியம் தாவ்லே ஓர் அறிக்கை வெளி யிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்ப தாவது: தோழர் மல்லுஸ்வவராஜ்யம் 1930-31களில் தெலுங்கானா பிராந்தியத்தில் சூளூர்பேட்டை யில் ஒரு சிறிய நிலச்சுவான்தார் குடும்பத்தில் பிறந்தார். அந்த சமயத்தில் அது ஹைதராபாத் நிசாம் ஆண்டுவந்த மன்னராட்சியின்கீழ் இருந்து வந்தது. தோழர் மல்லு ஸ்வராஜ்யம் சிறு வயதினராக இருந்தபோதே அவர் தந்தை காலமாகிவிட்டார். அவருடைய தாயார்தான் அவரைப் பேணிப் பாதுகாத்து வந்தார். அந்த சமயத்தில் காந்திஜி உப்பு சத்தியாக்கிரகம் நடத்தியக் கேள்விப்பட்டு, அவர் தன் மகளுக்கு ‘ஸ்வராஜ்யம்’ எனப் பெயரிட்டார். தோழர் மல்லு ஸ்வராஜ்யம், தன்னுடைய பதின்பருவக் காலத்திலேயே, தன்னுடைய அண்ணனின் செல்வாக்கின்கீழ், ஆந்திரா மகளிர் சபா மூலமாக, விடுதலை போராட்ட இயக்கங்களில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அந்த சமயத்தில் தெலங்கானாவில் கட்டாய உழைப்புக்கு எதிராக விவசாயிகள் இயக்கம் தொடங்கி இருந்தது. நிசாமின் எதேச்சாதிகார, மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராக ஆந்திர மகாசபாவின் மேடையின்கீழ் எதிர்ப்புக் கிளர்ச்சிப் போராட்டங்கள் நடை பெற்றன. இவற்றில் கம்யூனிஸ்ட்டுகள் முன்னணிப் பாத்திரம் வகித்தனர். இது பின்னர் நிசாம் ஆட்சிக்கு எதிராகவும் அதன் ஒடுக்குமுறை நிலப்பிரபுத்துவ நடைமுறை களுக்கு எதிராகவும் போராட்டங்களை முன்னெடுத்தது. ஆந்திர மகளிர் சபாவும் இதன் ஓர் அங்கமாக இருந்தது. கிராம ராஜ்யத்தை நிறுவி... 1944இலிருந்து நிலப்பிரபுக்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதல்கள் ஒரு புதிய உச்சத்திற்கு சென்றது. தோழர் ஸ்வராஜ்யம் தனக்கு 16 வயதாக இருக்கும்போதே, 1946இல் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினரானார்.தெலங்கானா விவசாயிகள் போராட்டத்தில் தன்னை முழுமை யாக உட்படுத்திக்கொண்டார்.
பல பகுதிகளில் நிலப்பிரபுக்களை விரட்டியடிப்பதில் விவசாயிகள் இயக்கம் வெற்றி பெற்றது. நிலங்களை நிலமற்ற விவசாயிகளுக்குப் பகிர்ந்து கொடுத்தது. அவர்கள் இந்தப் பகுதிகளில் சுமார் 12 முதல் 18 ஆண்டுகள் கிராம ராஜ்யத்தை நிறுவி ஆட்சி நடத்தி னார்கள். தோழர் ஸ்வராஜ்யம், சூர்யாபேட்டை தாலுக்காவில் புரட்சி இயக்கத்தின் அமைப்பாளராக இருந்தார். கொரில்லா போராட்ட உத்திகளைக் கடைப்பிடிப்பதில் நிகரற்ற தலைவராகவும், அப்பகுதியின் கமாண்டராகவும் செயல்பட்டு வந்தார். இவ்வாறு இவருடைய வீரஞ்செறிந்த நட வடிக்கைகள் காரணமாக, குடும்பங்களில் ஆண்களிடம் அடி-உதை வாங்கிக்கொண்டி ருந்த பெண்களும், வர்க்க எதிரிகளிடம் பல்வேறு வடிவங்களில் கொடுமைகளுக்கு ஆளாகி இருந்த பெண்களும் இவருடைய தலைமையின்கீழ் அணிவகுத்தனர். இவரும், இவருடைய தலைமையின்கீழ் அணிதிரண்ட பெண்களும் பெண்கள் போராட்டக் கிளை களை அமைத்து மட்டுமல்லாமல், மனைவி மார்களை அடிப்பதற்கு எதிராகவும், கட்டாய திருமணங்களுக்கு எதிராகவும், குடி போதைக்கு எதிராகவும் போராட்டங்களை நடத்தினார்கள்.
பத்தாயிரம் விலை
1948இலிருந்து, தெலுங்கானா வீரஞ்செறிந்த போராட்டம் கம்யூனிஸ்ட் கட்சியால் 1951 அக்டோபரில் அதிகாரபூர்வமாக விலக்கிக்கொள்ளப்படும்வரையிலும் தோழர் மல்லு ஸ்வராஜ்யம், கோதாவரி வனப் பகுதிகளில் கோயா பழங்குடியினர் மத்தியில் தங்கி, கொரில்லா போராட்டங்களை நடத்தி வந்தார். அந்த சமயத்தில் பல்வேறு சிரமங்களும் ஆபத்துக்களும் அவரைச் சூழ்ந்திருந்தபோதிலும், அவை குறித்து அவரிடம் கேட்டால், “நாங்கள் காடுகளில் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்தோம்” என்றுதான் கூறுவார். நிசாம் அரசாங்கம் அவரைப் பிடித்துக் கொடுத்தால் பத்தாயிரம் ரூபாய் பரிசு அளிக்கப்படும் என்று அறிவித்திருந்தது. எனினும் அவர் கைது செய்யப்படுவதிலிருந்து தப்பித்து வந்தார். இதற்கு மக்கள் அவரைத் தங்கள் கண்ணின் மணி போன்று பாதுகாத்ததே காரணமாகும். தோழர் மல்லு ஸ்வராஜ்யம் 1964இல் கட்சி இரண்டாகப் பிளவுபட்டபின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தன்னை இணைத்துக் கொண்டார்.
கட்சியின் கட்டளைக்கிணங்க 1978இல் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, சட்டமன்ற உறுப்பினரானார். அவர் தன்னுடைய கடைசிக்காலம் வரையிலும் தன் போராட்ட உணர்வைத் தக்க வைத்திருந்தார். அவர், தன்னுடன் இதர மகளிர் தலைவர்களையும் இணைத்துக்கொண்டு, ஆந்திரப் பிரதேசம் மகளிர் சங்கத்தைக் கட்டி எழுப்புவதில் தொடர்ந்து செயல்பட்டு வந்தார். 1981இல் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அமைக்கப்பட்டபோது அவர் ஆந்திரப்பிரதேசம் கிளை (1981-2001)கிளை யின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தோழர் மல்லு ஸ்வராஜ்யம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக இருந்தார். 2002இல் மத்தியக்குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் எப்போதும் தன்னை ‘இயக்கத்தின் களச் செயற்பாட்டாளர்’ (‘fidld worker of the movement’) என்றே தன்னைக் குறித்துக் கூறிடுவார். அவர் முதுமையடைந்து இயங்கமுடியாத நிலை ஏற்பட்ட சமயத்திலும் இத்தகு போராட்ட உணர்வை அவர் இழந்துவிடவில்லை. நம்முடைய ஸ்தாபனத்திற்கு இத்தகைய பாரம்பர்யத்தைத்தான் அவர் நமக்கு விட்டுச்சென்றிருக்கிறார் என்பதில் நாம் பெருமைகொள்கிறோம். அத்தகைய அவரின் வாரிசுகள் நாங்கள் என்று நிரூபித்திடுவோம் என்றே நாங்கள் நம்புகிறோம்.
தோழர் ஸ்வராஜ்யம் நீடூழி வாழ்க!
தோழர் ஸ்வராஜ்யம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்திற்கு, என்றென்றும் வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்வார்! இவ்வாறு அந்தஅறிக்கையில் கூறப் பட்டுள்ளது. (ந.நி.)