புதுதில்லி,டிச.28- ஐ.ஐ.டி கல்வி நிறுவனத்தில் ஆசிரியர் நியமனம், முனைவர் பட்டப் படிப்பு ஆகிய வற்றில் இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழுமையான ஆதரங்களுடன் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் நேரில் சந்தித்து கடிதம் வழங்கினார். ஐ.ஐ.டி பேராசிரியர் நியமனம் குறித்த முதல் கடிதம்: “நான் நாடாளுமன்றத்தில் ஐ.ஐ.டி இட ஒதுக்கீடு காலியிடங்கள் பற்றிய கேள்வி எண் 65/ 255 க்கு பதில் அளிக்கும் போது மொத்த காலியிடங்கள் 13701 எனத் தெரிவித்தீர்கள். ஆனால் இட ஒதுக்கீடு பிரிவினர் வாரியாக, பதவி வாரியாக, நிறுவன வாரியாக விவரங்கள் தரவில்லை.
அதே கடிதத்தில் எந்தவொரு மத்திய கல்வி நிறுவனமும் ரோஸ்டர் தயாரிப்ப தில் சிரமம் இருப்பதாகவோ, விளக்கம் கோரி இருப்பதாகவோ தெரிவிக்க வில்லை என்றும் தெரிவித்தீர்கள். ஆனால் பல ஆர்.டி. ஐ. பதில்கள் ஆசிரியர் பதவிகள் பற்றி மத்திய கல்வி நிறுவனங்கள் விளக்கம் கேட்டிருப்ப தாக தெரிவித்துள்ளன. அதனால் ரோஸ்டர்களை தயாரிக்க இயலவில்லை என்றும் அதில் தெரிவித்துள்ளன. தில்லி, ஹைதராபாத், மாண்டி, பிலாய் ஐ.ஐ.டி கள் மற்றும் சூரத், ஜாம்ஷெட்பூர் என்.ஐ.டிகள் ஆகியன இவ்வாறு தெரிவித்துள்ள நிறு வனங்களில் அடக்கம். இந்த சிரமங்கள் செய லாளர் (உயர் கல்வி) க்கு வழிகாட்டல் கேட்டு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. ரோஸ்டர்கள் தயாரிக்கப் படாவிடில் எப்படி இட ஒதுக்கீட்டு காலியிடங்களை அடையாளம் காண முடியும், நிரப்ப முடியும்? ஆகவே உங்கள் பதிலுக்கும், நடப்புக்கும் இடைவெளி உள்ளது. உடனே ரோஸ்டர்கள் தயாரிக்கப்பட வேண்டும். பொது வெளியில் நிறுவன வாரியாக அறிவிக்கப்பட வேண்டும். பல மத்திய கல்வி நிறுவனங்கள் வெளி யிடப்படும் அறிவிக்கைகளில் இட ஒதுக்கீட்டு காலியிடங்கள் எண்ணிக்கை தெரிவிக்கப்பட வில்லை. இது ரோஸ்டர் தயாரிப்பில் அவர்களுக் குள்ள தெளிவின்மையின் காரணமாக இருக்கலாம்.
ஐ. ஐ.டி, ஐ.ஐ.எம், என்.ஐ.டி, போன்ற நிறு வனங்கள் எல்லாம் இந்தியாவின் பெருமைமிகு கல்வி நிலையங்கள் ஆகும். இவற்றில் ஓ. பி.சி, எஸ்.சி, எஸ்.டி ஆசிரியர்கள் பிரதிநிதித்துவம் மிகக் குறைவாக இருப்பது தொடர்ந்து வரும் அவலம் ஆகும். ஆனால் இட ஒதுக்கீடு காலியிடங்களை நிரப்புவதற்கான நியமனங்களில் கூட இப்படி வெளிப்படைத் தன்மையும், தெளிவின்மையும் இருப்பது அபாயகரமானது. உண்மையாக இதய சுத்தியோடு இட ஒதுக்கீட்டை நிரப்ப இவை அறிவிக்கப்பட்டுள்ளனவா என்ற ஐயத்தை எழுப்புவதாக உள்ளன. இது தொடர்பான அறிவிக்கைகளின் நகல்கள் இணைக்கப்பட்டுள்ளன. உங்கள் பதிலில் “இலக்குடன் கூடிய நியமனங்கள்” செப் 5, 2021 இல் துவங்கி ஓராண்டுக்குள் நடத்தி முடிக்கப்படும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது. அதை நான் வரவேற்கிறேன். ஆனால் என் கேள்வி என்னவெனில் இதை நடத்தி முடிக்க எந்தெந்த நிறுவனங்களில், எந்தெந்த பதவிகளில் எவ்வளவு இட ஒதுக்கீட்டு காலியிடங்கள் பிரிவு வாரியாக அடையாளம் காணப்பட்டுள்ளன? எந்தெந்த கல்வி நிறுவனங்கள் “இலக்குடன் கூடிய நிய மனங்களை “ துவக்கியுள்ளன? இன்னும் துவக்காத நிறுவனங்கள் எவை? ரோஸ்டர் தயாரிப்பில் எல்லா நிறுவனங்களுக்கும் தெளிவு தரப்பட்டுவிட்டதா? என்பதெல்லாம் தெரிவிக்கு மாறு வேண்டுகிறேன்.
பல நிறுவனங்கள் நுழைவு நிலைப் பதவியான உதவிப் பேராசிரியர் பணியிடங்களை மட்டுமே நிரப்ப அறிவிக்கைகளை வெளி யிட்டுள்ளதாக தெரிகிறது. இது மத்திய கல்வி நிறுவனங்கள் (ஆசிரியர் நியமன இட ஒதுக்கீடு சட்டம்) 2019 க்கு விரோதமானது. பேராசிரியர், இணைப் பேராசிரியர் பதவிகளுக்கும் இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே சட்டம். இப் பதவிகளில் ஓ. பி.சி., எஸ்.சி., எஸ்.டி பிரதிநிதித்துவம் மிகக் குறைவு. ஆகவே முறையாக “இலக்குடன் கூடிய நிய மனங்கள்” நடந்தேறவும், மத்திய கல்வி நிறு வனங்கள் (ஆசிரியர் நியமன இட ஒதுக்கீடு சட்டம்) 2019 அமலாகவும், என்னுடைய நாடாளு மன்ற கேள்விக்கு முழு பதிலை தருமாறு அதிகாரிகளை அறிவுறுத்தவும் வேண்டுகிறேன்.”
இரண்டாவது கடிதம்
இரண்டாவது கடிதம் முனைவர் பட்ட அனுமதியில் இட ஒதுக்கீட்டை கடைப்பிடிப்பது குறித்தது. “மத்திய கல்வி நிறுவனங்கள் (மாணவர் அனுமதியில் இட ஒதுக்கீடு) 2006 சட்டம் முனை வர் பட்ட அனுமதியில் மீறப்படுவது பற்றியது. எம்.பிக்களின் நாடாளுமன்ற கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதில்கள், முனைவர் பட்ட அனு மதிகளில் ஓ. பி.சி, எஸ்.சி, எஸ்.டி பிரதிநிதித்துவம் மிகக் குறைவாக இருப்பதை அம்பலப்படுத்தி உள்ளன.
ஐ.ஐ.எஸ்.சி நிறுவனத்தில் இரண்டு தொடர்ச்சியான ஆண்டுகளில் ஒருங்கிணைந்த முனைவர் பட்ட அனுமதிகளில் ஓ. பி.சி, எஸ்.டி ஒருவர் கூட இடம் பெறவில்லை. என்.ஐ.டி நாக்பூரில் 2017- 2020 ஆண்டு அனுமதிகளில் ஒரு எஸ்.சி, எஸ்.டி, ஓ. பி.சி கூட இல்லை. ஐ.ஐ.டி கோரக்பூர் கடந்த 3 ஆண்டுகளில் தனது 17 துறைகளில் ஒரு எஸ்.டி மாணவரை கூட அனுமதிக்கவில்லை. 2020 இல் எல்லா ஐ.ஐ.டிகளிலும் சேர்த்து கணினி அறிவியல், பொறியியல் முனைவர் படிப்பு அனுமதிகள் பெற்றவர்களில் 80ரூ பேர் பொதுப் பிரிவினரே. இவ்விவரங்கள் எல்லாம் மேற்கண்ட சட்டம் எப்படி அமலாகாமல் சிதைக்கப்பட்டுள்ளன என்பதை எடுத்துக் காட்டுகிறது. ஆண்டு அறிக்கை களை பார்க்கும் போது மற்ற முதுநிலைப் படிப்புகளிலும் இதே நிலைமை என்பது தெளி வாகிறது. ஏற்கெனவே நீங்கள் அமைத்த ராம் கோபால் வர்மா குழு எல்லா விவரங்களும் கை வசம் இருந்தும் இது குறித்த ஆய்வை முறையாக செய்யவில்லை. சட்ட அமலாக்கம் குறித்த எந்த உருப்படியான பரிந்துரையையும் தரவில்லை. சமூக நீதிக்கு எதிரான அறிக்கையை நிராகரிக்கா மல் இன்னும் உங்களை தலைவராக கொண்ட ஐ.ஐ.டிகளின் கவுன்சில் மேசையில் பரிசீலனை என்ற பெயரில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான தீர்வு காணப்பட வேண்டும்.
1) “ஆண்டு அனுமதி எண்ணிக்கை” (Annual Perimitted Strength) வரையறுக்கப்பட்டு அதற்கான இட ஒதுக்கீடு அமலாக்கப்பட வேண்டும். ஆனால் கரக்பூர், திருப்பதி, ஜோத்பூர் ஆகிய ஐ.ஐ.டி நிறுவனங்களில் “ஆண்டு அனுமதி எண்ணிக்கை” (Annual Perimitted Strength) என்கிற நடைமுறை இல்லை என அரசின் தரப்பிலேயே தெரிவிக்கப்படுவது சரியல்ல. இது தீர்மானிக்கப்படாமல் இட ஒதுக்கீடு எப்படி அமலாகும்?
2) அரசு நிதி தரப்படாத ஐ.ஐ.டி முனைவர் அனுமதிகள் இட ஒதுக்கீட்டின் வரம்பிற்குள் வராது என்ற அரசின் கருத்து சட்டத்திற்கு முரணானது. அரசு நிதி உதவியற்ற இடங்களும் “ஆண்டு அனுமதி எண்ணிக்கை” (Annual Perimitted Strength) க்குள் வரும் என்பதால் அவற்றுக்கும் சேர்த்தே இட ஒதுக்கீடு என்பதே சட்ட பூர்வ நிலை. அரசின் வாதத்தை ஏற்றுக் கொண்டால் ஆய்வுக்குரிய அரசின் நிதி குறைக்கப்பட இட ஒதுக்கீடே இல்லாத நிலை உருவாக்கப்பட்டு விடும்.
பிப்ரவரி 2021 இல் இந்து நாளிதழ் தொடர் கட்டுரைகளை வெளியிட்டது. அவற்றில் தேவையான அளவிற்கு விண்ணப்பங்கள் எஸ்.சி, எஸ்.டி, ஓ. பி.சி பிரிவு மாணவர்களிடம் இருந்து வந்தும் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்படவில்லை என்பது விவரிக்கப்பட்டுள்ளது. ஆகவே இடஒதுக்கீடு அமலாக்கம் என்பதற்கு பதிலாக, இடங்கள் மறுப்பு என்பதே கடைப் பிடிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. கட் ஆப், தேர்வு வரையறைகள் உச்ச பட்சமாக வரை யறுக்கப்பட்டு அவர்களை வெளியே நிறுத்துவது நடந்தேறி உள்ளது. சட்ட நியதிகளை மீற வழிகள் கண்டு பிடிக்கப்படுகின்றது. அநேகமாக எல்லா ஐ.ஐ.டி களுமே தேர்வுப் பட்டியலில் இட ஒதுக்கீடு விவரங்களை வெளி யிடுவதில்லை. எவ்வளவு மதிப்பெண்கள், சமூக உள்ளடக்கம், அரசு நிதி விவரம் ஆகிய விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. தேர்வின் ஒவ்வொரு கட்டத்திலும், இறுதித் தேர்விலும் இத்தகைய தகவல்கள் தரப்பட வேண்டும்.
நேர்காணல் குழுவிலும் சமூக உள்ளடக்கம் இட ஒதுக்கீட்டு பிரிவினரை உள்ளடக்கி அமைய வேண்டும். நிரப்பபடாத இட ஒதுக்கீட்டு காலியிடங்கள் அடுத்த ஆண்டிற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும். இட ஒதுக்கீடு முறையை செயல்படுத்த பயிற்சி, ஊக்குவிப்பு ஆகியன மாணவர்களுக்கு உறுதி செய்யப்பட வேண்டும்.” முனைவர் பட்ட அனுமதி களில் இட ஒதுக்கீடு அமலாவதே ஆசிரியர் நியமனங்களுக்கு தேவை யான பொருத்தமான தேர்வுகளையும் உறுதி செய்யும் என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இவ்விரு கடிதங்களும் ஆதார பூர்வமாக இடஒதுக்கீடு மீறலை எவ்வாறு மத்திய கல்வி நிறுவனங்கள் செய்கின்றன என்பதை நிறுவி யுள்ளன. பல பக்க ஆவண ஆதாரங்களும் இணைத்து தரப்பட்டுள்ளன. உயர்கல்வி நிறுவனங்கள் “ஏகலைவர் களை” அனுமதிக்க மறுக்கும் அநீதிக்கு முற்றுப் புள்ளி வைக்கிற வரை இடையறாது குரல் கொடுப் போம். சட்ட மீறல்களை தடுத்து நிறுத்துவோம். சமூக நீதியை காப்பாற்றுவோம் என்று சு.வெங்கடேசன் எம்.பி.தெரிவித்துள்ளார்.