states

img

உத்தரப்பிரதேசத்தை மிரட்டும் டெங்கு

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் டெங்கு காய்ச்ச லால் பாதிக்கப்படும் நோயா ளிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிக ரித்து வருகிறது. குறுகிய காலத்தில் மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 1,700ஐ தாண்டியுள்ளது.  மாநிலத்தின் தலைநகர் மண்டலமான லக்னோவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 37 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. லக்னோவை தொடர்ந்து அலிகஞ்ச், சந்திராநகர், கோசைங்கஞ்ச், இந்திரா நகர், சின்காட், ககோரி, துரியாகஞ்ச் ஆகிய பகுதிகளில்  டெங்கு பரவல் பகுதியாக உள்ளது என்  றும், தற்போதைய நிலவரப்படி ஒருவர்  டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியுள்ளார் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.