புதுதில்லி, மார்ச் 20 - அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பான ‘சம்யுக்த கிசான் மோர்ச்சா’ (SKM) சார்பில், தில்லி ராம் லீலா மைதானத்தில் திங்கள ன்று மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, விவசாயிகள் ஆயிரக்கணக்கில் திரண்டதால், தில்லியில் நெருக்கடி ஏற்பட்டு, போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. முன்னதாக 15 பேர்களைக் கொண்ட ‘சம்யுக்த கிசான் மோர்ச்சா’ தலைவர்கள் அடங்கிய குழுவானது, ஒன்றிய அரசின் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரை கிருஷி பவனில் சந்தித்து, தங்களின் கோரிக்கைகள் தொடர்பாக நேரில் மனு அளித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தங்களின் கோரிக்கைகள் நிறை வேற்றப்படாத பட்சத்தில், 2020-ஆம் ஆண்டு நடைபெற்றதை விட மிகப்பெரிய ஒரு போராட்டத்தை நடத்துவோம் என்றும், அதற்கான அறிவிப்பு ஏப்ரல் மாத இறுதியில் வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.
வேளாண் சட்ட திருத்த மசோதாக்களை திரும்பப் பெறக்கோரி, 2020 ஆகஸ்ட் 9 முதல் 2021 டிசம்பர் 11 வரை தில்லி எல்லைகளை முற்று கையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். வெயில், மழை, குளிர், பனி எதையும் பொருட் படுத்தாமல், சுமார் 740க்கும் அதிகமான உயிர் களைப் பறிகொடுத்து, ஓராண்டுக்கும் மேலாக, விவசாயிகள் நடத்திய இந்தப் போராட்டம் உல கையே திரும்பிப் பார்க்க வைத்தது. இதனால், வேறுவழியின்றி 3 வேளாண் சட்டத்திருத்தங்களை யும் மோடி அரசு திரும்பப் பெற்றது. குறைந்தபட்ச ஆதார விலையை சட்டமாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் பரிசீலிப்பதாக அறிவித்தது. அதன்பேரில் விவ சாயிகளும் தங்களின் போராட்டத்தைத் திரும்பப் பெற்றனர். கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனில் மீண்டும் போராட்டம் நடத்துவோம் எனவும் எச்சரித்திருந்தனர்.
ஆனால், குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பான சுவாமிநாதன் ஆணைய அறிக்கை யை அமலாக்க வேண்டும்; தில்லி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான வழக்குகள் மற்றும் மின்சார சட்டதிருத்த மசோதா- 2022ஐ திரும்பப் பெற வேண்டும்; லக்கிம்பூர்கேரியில் விவசாயிகள் மீது காரை ஏற்றிக் கொன்ற குற்றச்சாட்டில் கைதான ஆசிஷ் மிஸ்ராவின் தந்தை ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும், போராட்டத்தின் போது இறந்த 740 விவசாயிகளுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கை களை 2 ஆண்டுகளாகியும் மோடி அரசு நிறைவேற்ற வில்லை. இதுதொடர்பாக, சம்யுக்த கிசான் மோர்ச்சா கடந்த ஜனவரி 26 அன்று ஹரியானாவில் மகா பஞ்சாயத்தை கூட்டியது. உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, இமாசல பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநில விவசாயிகள் சங்கங்கள் கலந்து கொண்டன. இதற் கடுத்ததாக பிப்ரவரி 9 அன்று ஹரியானாவின் குருஷேத்ராவிலும் மூன்றாவதாக, மார்ச் 10 அன்று உத்தரப் பிரதேசத்தின் மீரட்டிலும் மகா பஞ்சாயத்துக்கள் நடைபெற்றன.
இதன் நிறைவாக, “நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகள் மார்ச் 20 முதல் மீண்டும் தில்லி ராம்லீலா மைதானத்தில் கூடி போராட்டம் நடத்து வோம்; இந்த போராட்டத்தைக் காலவரையின்றி தொடர்வதா? என்பதை அப்போது முடிவுசெய் வோம்; எங்கள் கோரிக்கைகளை ஒன்றிய அரசு நிறைவேற்றாவிட்டால், தொடர் போராட்டத்திற்கு வாய்ப்புள்ளது” என்று ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் யுத்வீர் சிங் அறிவித்திருந்தார். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 19) முதலே நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த விவ சாயிகள் தில்லியில் குவிய ஆரம்பித்தனர். திங்க ளன்று ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். இத னால், தில்லியில் பல்வேறு பகுதிகளில் போக்கு வரத்து மாற்றி விடப்பட்டதுடன், பலத்த போலீஸ் பாது காப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. முன்னதாக ஒன்றிய அமைச்சர் நரேந்திர சிங் தோமரைச் சந்தித்து விட்டு வந்த சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் தலைவர் தர்ஷன் பால் சிங், “ஒரு பெரிய போராட்டத்தின் துவக்கம் இது. 2020-21 எதிர்ப்பைக் காட்டிலும் பெரியதாக இருக்கும். இந்த பெரிய போராட்டத்திற்கான கட்டமைப்பு ஏப்ரல் 30-ஆம் தேதி கூட்டத்தில் முடிவு செய்யப்படும்” என்று அறிவித்தார். முன்னதாக, “ஏப்ரல் 30 வரை, இந்தியா முழுவதும் நடைபயணம், மகா பஞ்சாயத்துகள் மற்றும் மாநாடுகள் நடத்தப்படும்” என்றும் கூறினார்.