states

img

பழி ஓரிடம், பாவம் ஓரிடம்

மதுபான விற்பனை உரிமம் தொடர்பான வழக்கில் தில்லி முதல் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப் பட்டுள்ளார். முன்னதாக பாரத் ராஷ்டிரிய சமிதியின் கே. கவிதாவும் கைது செய்யப்பட்டார். ஏற்கெனவே மணீஷ் சிசோடியா சிறையில் உள்ளார். தில்லியின் மற்றொரு அமைச்ச ராக இருந்த சத்யேந்திர குமார் ஜெயினும் சிறையில் உள்ளார். ஆனால், இவர்களெல்லாம் யாருக்கு உதவுவதற்காக ஊழல்  செய்தார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார்களோ, அவரிடமி ருந்து ரூ.64 கோடி நிதியை பாஜக பெற்றிருக்கிறது. ஹைதராபாத்தைச் சேர்ந்த சரத் சந்திர ரெட்டி என்பவருக்கு டெல்லியின் 5 மண்டலங்களில் மது விற்பனை உரிமம் அளித்தில் ஊழல் என்பதுதான் குற்றச்சாட்டு. இவரது குடும்பத்  திற்குச் சொந்தமாக அரவிந்தோ ரியால்ட்டி அண்ட் இன்ப்ஃராஸ்ட்ரக்சர் நிறுவனம் 2020-21இல் பாஜகவிற்கு ரூ.9 கோடி நிதியளிக்கிறது. ஆனால், அடுத்த ஆண்டில் நிதி அளிக்கவில்லை. 2022 நவம்பர் 11 அன்று சரத் ரெட்டி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுகிறார். அடுத்த நான்கு நாட்களில், அவரது தந்தையின் நிறுவனமான அரவிந்தோ ஃபார்மா, ரூ.5 கோடியை  தேர்தல் பத்திரங்களாக பாஜகவிற்கு அளிக்கிறது. மே 2023இல்  சரத் ரெட்டியின் பிணை மனு விசாரணைக்கு வந்தபோது, அம லாக்கத்துறை எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. சிறையிலிருந்து வெளியில் வந்த ரெட்டி, ஜூனில் அப்ரூவர் ஆகிறார். நவம்பரில் அரவிந்தோ ஃபார்மா மேலும் ரூ.25 கோடியை பாஜகவிற்கு தேர்தல் பத்திரங்களாக அளிக்கிறது. அதே நவம்பர் 8இல், சரத் ரெட்டி இயக்குனராக இருக்கிற ஏபிஎல் ஹெல்த்கேர் ரூ.10  கோடியையும், அவரது தந்தையின் அரவிந்தோ ஃபார்மாவில் இயக்குனராக இருக்கிற ரகுநாதன் கண்ணன் என்பவரே இயக்கு னராக இருக்கிற மற்றொரு நிறுவனமான யூஜியா ஃபார்மா ரூ.15 கோடியையும் தேர்தல் பத்திரங்களாக பாஜகவிற்கு வழங்கி யுள்ளன.  பழி ஓரிடம், பாவம் ஓரிடம் என்பதைப் போல, லஞ்சத்தை பாஜக வாங்கிக்கொண்டு, மற்றவர்களைக் குற்றவாளிகளாக்கிக் கொண்டிருக்கிறது.