புதுதில்லி,டிச.29- முதுகலை மருத்துவப் படிப்புக் கான கலந்தாய்வு நடத்தப்படாமல் இருப்பதைக் கண்டித்தும் கலந்தா ய்வை உடனே நடத்தக்கோரியும் காவல்துறையின் தாக்குதலைக் கண்டித்தும் தில்லியில் பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர். இந்நிலையில் போராட்ட த்தை கைவிட்டு பணிக்கு திரும்புவ தாக அறிவித்துள்ளனர். கலந்தாய்வை நடத்தாமல் ஒன்றிய அரசு தாமதம் செய்வதை கண்டித்து பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது. இதனால் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பயிற்சி மருத்து வர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அமைச்சர் கூறுகையில், உச்சநீதிமன்றத்தில் இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் மருத்துவர்கள் போரா ட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதை தொடர்ந்து, பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவித்தனர்.