புதுதில்லி,டிச.29- கொரோனாவால் பெற்றோர்களை இழந்த சிறார்களுக்கு பிஎம் கேர்ஸ் மூலம் மாதம்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்திய கொரோனா தொற்றால் இந்தியாவில் தாய், தந்தை இருவரையும் இழந்த சிறுவர்களுக்கு ஒன்றிய அரசு பிஎம் கேர்ஸ் நிதி மூலம் உதவும் என அறி வித்திருந்தது. இதையடுத்து அந்த சலுகைகளைப் பெற மொத்தம் 6,098 விண்ணப்பங்கள் வந்திருந்தன. இதில் 3,481 சிறுவர்களின் விண்ணப்பங்களை அங்கீகரித்து பிஎம் கேர்ஸ் நிதியின் சலுகைகள் வழங்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக ஒன்றிய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாவட்ட ஆட்சியர் களின் மூலம் மொத்தம் 6,098 விண்ணப் பங்கள் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறைக்கு வந்திருந்தன. இதில் 3,481 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர் களுக்கு சலுகை கள் வழங்க முடிவு செய்யப் பட்டுள்ளது. அவர்கள் பெயரில் அஞ்சலகங் களில் வங்கிக் கணக்குகள் தொடங்கப் பட்டுள்ளன. அந்தக் கணக்குகள் மூலம் அந்த சிறுவர்களுக்குத் தேவையான நிதி உதவி உள்ளிட்ட சலுகைகளை ஒன்றிய அரசு வழங்கும். விடுதியில் உள்ள குழந்தைகளுக்கு மாதம்தோறும் ரூ.2,160-ம், விடுதியில் இல்லாத குழந்தைகளுக்கு மாதம்தோ றும் ரூ.2,000-ம் வழங்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.