states

நிலக்கரிக்காக 1 லட்சம் மரங்களை அழிக்க முடிவு

ஒடிசா, மே 5- நிலக்கரி சுரங்கத்திற்காக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட உள்ளன. ஒன்றிய நிலக்கரி அமைச்சகம்  திறந்தவெளி நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக ஒடிசாவில் ஒரு  லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்களை - அதாவது காடுகளை அழிக்கத் திட்டமிட்டு வருகிறது. இதனால் ஒடிசா மாநிலத்தில் உள்ள அங்குல் மாவட்டத்தில் யானைகளின் வாழ்விடம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. வனத்துறை க்குச் சொந்தமான காப்புக் காட்டில் மட்டும் ஒரு லட்சம் மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட உள்ளன. ஒன்றிய அரசு-தெலுங்கானா அரசுக்கும் இடையிலான கூட்டு நிறுவனமான சிங்கரேணி காலியரீஸ் கம்பெனி லிமிடெட் (SCCL) அங்குல் மாவட்டத்தின் செண்டிபாடா  பகுதி யில் உள்ள நைனி நிலக்கரி சுரங்கத்தில் நிலக்கரி யைத் தோண்ட முன்வந்துள்ளது.

இதற்கான மொத்த நிலம் 912.799 ஹெக்டேர் ஆகும், இதில் 643.095 ஹெக்டேர் வனப்பகுதி. 140.180 ஹெக்டேர் கிராம வனப்பகுதி. மீதமுள்ளவை காடு அல்லாத பகுதிகளாகும். மகாநதி பள்ளத்தாக்கின்  கீழ் அமைந்துள்ள கோண்ட்வானா படுகையின் தென்கிழக்கு மூலையில்  நிலக்கரி சுரங்கத்திற்காக 783.275 ஹெக்டேர் வனப்பகுதியை  கையப்படுத்த சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதிக்காக சிங்கரேணி காலியரீஸ் கம்பெனி காத்திருக்கிறது. வன அலுவலர் சமர்ப்பித்துள்ள அறிக்கையில்,  காப்பு வனப்பகுதியில் 1,05,092 மரங்கள், வருவாய் வனப்பகுதியில் 1,087 மரங்கள், வனம் அல்லாத பகுதிகளில் 327 மரங்களை வெட்ட வேண்டும். வெட்ட வேண்டிய மொத்த மரங்களில், 31,248 மரங்கள் 60 செ.மீ.க்கு மேல் சுற்றளவு கொண்டவை, 74,932 மரங்கள் 60 செ.மீ.க்கும் குறைவான சுற்றளவைக் கொண்டவை. அழியப்போகும் மரங்களில் சால் (ஷோரியா ரோபஸ்டா), தேக்கு (டெக்டோனா கிராண்டிஸ்), கொன்றை அல்லது சரக்கொன்றை (காசியா ஃபிஸ்துலா) மற்றும் நமை, வேல்-நாக-மரம் (அனோஜிசஸ் லாடிஃபோலியா) ஆகியவை அடங்கும். சாரா (புக்கனானியா), இலுப்பை (மதுகா இண்டிகா) மற்றும் புளி (டெண்டுலி) ஆகியவை காடுகள் இல்லாத பகுதியில் உள்ளன.

வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தல்

வனவிலங்குகள், குறிப்பாக யானைகளுக்கு ஏற்படப்போகும் அச்சுறுத்தல் குறித்தும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நிலக்கரி சுரங்கத்திற்காக குத்தகைக்கு எடுக்கப்பட உள்ள  வடக்கு மற்றும் தெற்கு பகுதி களில் காட்டு யானைகளின் நடமாட்டம் உள்ளது.   யானைகளுக்கு பாதுகாப்பான பாதையை உரு வாக்க வேண்டுமெனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வனத்துறை இந்தப் பிரச்சனையை எழுப்பியதற்குக் காரணம், மாநில நெடுஞ்சாலை-63-ன் இருபுறமும் தியோகர் பிரிவு வரை நிலக்கரி உள்ளது, எதிர்காலத்தில் பல நிறுவனங்கள் வர வாய்ப்புள்ளது தான் காரணம். ஒடிசாவில் தொழில்துறை வளர்ச்சியில் நிலக்கரிச் சுரங்கம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியாவில் 24 சதவீத நிலக்கரி ஒடிசாவில் உள்ளது.