பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு
நாக்பூர் தொழிற்சாலை வெடி விபத்து
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே உம்ரெட் எம்ஐடிசி பகுதி யில் அமைந்துள்ளது எம்.எம்.பி. அலுமினியம் தொழிற்சாலை. இந்த தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை அன்று பயங்கர வெடி விபத்து நிகழ்ந்தது.இந்த வெடிவிபத்தில் சிக்கி 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்த நிலையில், 8 தொழிலாளர்கள் படு காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், சனியன்று காலை மேலும் 3 தொழிலாளர்கள் சிகிச்சை பல னின்றி உயிரிழந்தனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மேலும் 5 தொழிலாளர்களின் நிலை மை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.