மனோஜ் ஜாரங்கேவின் தொடர் போராட்டத்தால் பணிந்த மகாராஷ்டிரா அரசு ஜனவரி மாத இறுதியில் மராத்தா இடஒதுக்கீடுக்கு ஒப்பு தல் அளித்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மகா ராஷ்டிரா பாஜக கூட்டணிக்குள் புகைச்சல் உருவாகியுள்ளது. சமீபத்தில் ஊழல் வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக தேசிய வாத காங்கிரஸை இரண்டாக உடைத்து, பாஜக கூட்டணியில் இணைந்து துணை முதல்வரான அஜித் பவாரின் முக்கிய வலது கரம் அமைச்சர் (மாநில உண வுத்துறை) சாகன் புஜ்பால் மராத்தா இடஒதுக்கீட்டிற்கான ஒப்புதலுக்கு எதிர்ப்பு தெரி வித்து தனது பதவியை ராஜி னாமா கடந்த நவம்பர் மாதமே செய்துள்ளார். ஆனால் பாஜக தலைவரும், துணை முதல்வருமான தேவேந் திர பட்னாவிஸ் இதைப் பற்றி வெளியில் கூற வேண்டாம் என மிரட்டியுள்ளதாகவும், அதனால் ராஜினாமா விவகாரத்தை பற்றி வெளியில் கூறாமல் இருந்த நிலையில், ஞாயிறன்று தனது ராஜினாமா விவகாரத்தை போட் டுடைத்துள்ளார் சாகன் புஜ்பால். இந்த விவகாரம் பாஜக கூட்ட ணிக்குள் சலசலப்பையும், அஜித் பவாருக்கு பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் அமைச்சார் பதவி ராஜினாமா செய்தது மூலம் சாகன் புஜ்பால் சரத் பவார் அணியில் இணைய உள்ளதாக வும் தகவல் வெளியாகியுள்ளது.