கொல்கத்தா, டிச.20- மேற்கு வங்கத்தில் இரண்டு நாட்களில் 3 விவசாயிகள் அடுத் தடுத்து தூக்குப் போட்டு தற் கொலை செய்து கொண்ட சம்ப வம் நடந்துள்ளது. அதிலும், மேற்கு வங்கத் தின் அரிசி கிண்ணம் என்று அழைக்கப்படும் புர்பா பர்த மான் மாவட்டத்தில் இந்த துய ரம் அரங்கேறியுள்ளது. புர்பா பர்தமான் மாவட்டம் கல்னா வட்டாரத்திற்கு உட்பட்ட பிருஹா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், வெள்ளிக்கிழ மையன்று தூக்குப் போட்டு தற் கொலை செய்துகொண்ட நிலை யில், சனிக்கிழமையன்று ரெய்னா வட்டாரத்தில் உள்ள தேபிபூர் மற்றும் பந்திர் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளும் இரு வர் தற்கொலை செய்து கொண் டுள்ளனர்.
இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் விசாரணை நடத்திவரும் நிலை யில், ‘’ஜாவத் சூறாவளி மற்றும் பருவம் தவறிய பெருமழை கார ணமாக, தாங்கள் சாகுபடி செய் திருந்த உருளைக்கிழங்கு மற் றும் நெற்பயிர்கள் அழிந்து போனதை தாங்கிக் கொள்ள முடியாமல் விவசாயிகள் தற் கொலை செய்து கொண்டனர்’’ என்று உயிரிழந்த விவசாயி களின் குடும்பத்தினர் கூறி யுள்ளனர். ஆனால், பயிர் இழப்பு கார ணமாக தற்கொலை நடக்க வில்லை என்று மேற்கு வங்க அரசு அதிகாரிகள் மறுத்துள்ள னர். ‘’ஒரு வாரத்திற்கு முன்பு கிரிஷக் பந்து திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதியுதவி கிடைக்கச் செய்துள்ளோம். அப்படியிருக்க விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டி ருக்க வாய்ப்பில்லை’’ என்று அரசின் விவசாய ஆலோசகர் பிரதீப் மஜூம்தார் தெரிவித் துள்ளார்.