states

கிரிமினல் பட்ஜெட் - சிபிஎம் கடும் விமர்சனம்

புதுதில்லி, பிப். 1 - ஒன்றிய அரசின் பட்ஜெட் 2022-23ல் வெளியிடப்பட்டுள்ள அறி விப்புகள், இந்திய இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்கள் மீதான கிரிமினல்தனமான தாக்குதல் களே என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.  பட்ஜெட் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு விடுத்துள்ள விமர்சன அறிக்கை வருமாறு: இந்திய மக்கள் பெருவாரி யான எண்ணிக்கையில் வேலை இழப்பையும், அவர்களது உண்மை வருமானத்தில் மிகப்பெரிய அளவிற்கு இழப்பையும் சந்தித்திருக்கும் கடுமையான பொருளாதாரச் சூழல் நிலவும் பின்ன ணியில் ஒன்றிய நிதி அமைச்சர் 2022 -23ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். 

கிராக்கி வீழ்ச்சி

நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி), பெருந்தொற்று காலத்திற்கு முந்தைய நிலைமையை விட ஓரள விற்கு அதிகரிக்கும் என்று பட்ஜெ ட்டில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. உண்மையில் தனிநபர் நுகர்வுக் கான செலவினம் என்பது பெருந் தொற்று காலத்திற்கு முந்தைய அளவைவிட குறைவானதாகவே இன்னும் இருக்கிறது; மக்களி டையே பொருள்களை வாங்கி நுகர்வதற்கான சக்தி மிகவும் குறை வாக இருப்பதன் விளைவுகளை தொழிற்துறை எதிர்கொண்டு வருகிறது. பொருளாதாரத்தில் உற்பத்திப் பொருள்களுக்கான கிராக்கி மிக மிக குறைவாக இருக்கிறது என்பதே உண்மை. இத்தகைய சூழலில், பெரு மளவிற்கு வேலைவாய்ப்பு உரு வாக்கம் மற்றும் உள்நாட்டுச் சந்தை யில் பொருள்களுக்கான கிராக்கி யை அதிகரிப்பது ஆகியவற்றை நோக்கி மிகப்பெரிய நடவடிக்கை களை எடுக்கும் விதத்தில் பட்ஜெட் அமைந்திருக்க வேண்டும். ஆனால் இந்த பட்ஜெட் மேற்கண்ட பிரச்சனைகளை கையாளத் தவறியுள்ளது. நகர்ப்புற வேலை உறுதித்திட்டத்தை அறி முகப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதித் திட்டத்திற்கு வெறும் ரூ.25ஆயி ரம் கோடியாக வெட்டப்பட்டிருக் கிறது. உணவு, எரிபொருள் மற்றும் உரம் போன்ற மிக முக்கிய அத்தியா வசியப் பொருள்களுக்கான மானி யங்களும் கடுமையாக வெட்டப் பட்டுள்ளன. சுகாதாரம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கான நிதி ஒதுக்கீடுகளும் குறைக்கப் பட்டுள்ளன.  2021-22 பட்ஜெட்டின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளிலிருந்து மொத்தச் செலவினம் ரூ.1லட்சத்து 74 ஆயிரத்து 99 கோடியாக அதி கரிக்கப்பட்டு பட்ஜெட்டில் முன் மொழியப்பட்டுள்ளது. ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் கணக்குப்படி, 2020-21 பட்ஜெட்டில் 17.8சதவீதமாக இருந்த மொத்த செலவினம், 2022-23 பட்ஜெட் மதிப்பீடுகளின்படி 15.3 சதவீதமாக குறைந்துள்ளது.

கார்ப்பரேட் செல்வம்குவிப்பு

அதேபோல, வருவாய் இனங் கள் அதிகரித்துள்ளதாகக் காட்டப் பட்டுள்ளது; இதில் முதன்மையான சில காரணங்கள் உள்ளன. பெருந் தொற்றுக் காலத்தில்  கார்ப்பரேட் வரி கணிசமாககுறைக்கப்பட்டு, அதன் மூலம் கார்ப்பரேட்டுகள் தங்க ளது லாபங்களை  பெருமளவு திரட்டிக்கொள்ளவும், குவித்துக்  கொள்ளவும் அனுமதிக்கப் பட்டார்கள்; மறுபுறத்தில் ஜிஎஸ்டி மூலமாகவும் பெட்ரோலியப் பொருட்கள் மீதான கடுமையான மறைமுக வரிகளை மக்கள் தலை யில் சுமத்தியதன் மூலமாகவும் அரசின் வருவாய் அதிகரிக்கப் பட்டுள்ளது.  எனினும், வருவாயில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியுடன் ஒப்பிடும் போது அரசின் செலவினங்களில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி என்பது வெகு தூரத்தில் இருக்கிறது. உண்மை மதிப்பில், கடந்த நிதியாண்டில் திருத்தப்பட்ட மதிப்பீடுகளுடன் ஒப்பிடும் போது இன்னும் மிக மிகக் குறைவாகவே மக்களுக் கான செலவினங்கள்நடந்துள்ளன.  பட்ஜெட்டில் காட்டப்பட்டுள்ள செலவினம் என்பது ஒன்றிய அரசின் செலவினம் மட்டுமல்ல, மாறாக மாநிலங்களின் வளங்களை யெல்லாம் மடைமாற்றம் செய்து, மாநிலங்களிடமிருந்து பலவந்தமாகப் பறித்து, உறிஞ்சி எடுக்கப்பட்ட பணத்தின் மூலம் செய்யப்பட்ட செலவுகளே. 2021-22  ஜிடிபி-யில் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்ட தொகை 6.91 சதவீதமாக இருந்தது; 2022-23ல்  இது 6.25 சதவீதமாக வீழ்ந்துள்ளது.

விவசாயிகளின் திட்டங்களுக்கு நிதி வெட்டு

விவசாயிகளுக்கான அனைத்து மிகப்பெரிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் பெரிய அள விற்கு வெட்டப்பட்டுள்ளன. மத்திய உணவுக்கிடங்கிற்கான விளை பொருள் கொள்முதலுக்கான நிதி 28 சதவீதம் அளவிற்கு கடுமை யாக வெட்டப்பட்டுள்ளது. விவ சாயிகள் தங்களது உற்பத்திப் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலையை சட்டப்பூர்வமாக உத்தரவாதம் செய்யுங்கள் என்று பெரும் போராட்டங்கள் நடத்தி வரும் வேளையில் இந்த தாக்கு தல் தொடுக்கப்பட்டுள்ளது. உர மானியம் 25 சதவீதம் வெட்டப் பட்டுள்ளது. பிஎம்-கிசான் திட்டத்தின் கீழ் 12.5 கோடி விவசாய குடும்பங்களுக்கு ரூ.6 ஆயிரம் அளிப்பதாகக் கூறப்பட்ட திட்டத் திற்கு உண்மை மதிப்பீடுகளின் அடிப்படையில் ரூ.75 ஆயிரம் கோடி  ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால் ரூ.68 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. பயிர் இன்சூரன்ஸ் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டில் 500 கோடி ரூபாயை வெட்டிவிட்டார்கள். 

குழந்தைகளுக்கு ஒன்றுமில்லை

மோடி அரசு தனது ஆட்சிக் காலத்தில் குழந்தைகளின்நலனுக் காக ஒரு சிறு தொகை கூட  செலவழிக்கவில்லை. திருத்தப் பட்ட மதிப்பீடுகளின்படி அறிவிக்கப் பட்டுள்ள ரூ.5700 கோடி என்பது பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதை விட மிக மிகக் குறைவாகும். பள்ளி கள் மற்றும் அங்கன்வாடி மையங் களை மூடுவது என்ற மிக மோச மான முடிவுகளை எடுத்துள்ள இந்த  அரசு குழந்தைகளுக்காக எதை யும் அறிவிக்கவில்லை.  பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியின மக்களின் நலன் களுக்காக மிகக்குறைந்த அள விலேயே நிதி ஒதுக்கீட்டில் உயர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால் உண்மை மதிப்பீட்டில் இந்த ஒதுக்கீடு குறைவானதே. ஏனென் றால் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல காரணிகள் இந்த நிதி ஒதுக் கீட்டின் உண்மை மதிப்பை குறைக்கின்றன. மதிய உணவு திட்டத்திற்கு பிஎம் போஷான் என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆனால் நிதி ஒதுக்கீடு ரூ.10,234 கோடியிலிருந்து எந்தவிதத்திலும் அதிகரிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு இந்த திட்டத்தின்கீழ் 35சத வீத குழந்தைகளுக்கு எதுவுமே கிடைக்கப்பெறவில்லை. நிதி  அமைச்சர் 2லட்சம் அங்கன்வாடி மையங்களை மேம்படுத்தப்போவ தாக ‘நாரிசக்தி’ என்ற திட்டத்தை அறிவித்திருக்கிறார். ஆனால் இதற்கான நிதி ஒதுக்கீடு, திருத்தப் பட்ட மதிப்பீட்டில் சொல்லப்பட்ட வெறும் ரூ.20ஆயிரம் கோடி என்பதிலேயே நின்றுபோனது. 

செல்வ வரி இல்லை

கடந்த 2 ஆண்டுகளில் சமையல்  எரிவாயு மானியம் பெரிய அள விற்கு வெட்டப்பட்டுள்ளது. கடந்த  ஆண்டு இதற்கான மானிய ஒதுக்கீடு 60சதவீதம் அளவிற்கு வெட்டப் பட்டது. இந்நிலையில் 2022-23 பட்ஜெட்டிலும் மற்றுமொரு 60சத வீதம் வெட்டப்பட்டுள்ளது. பட்ஜெட் டில் முறைசாராத் தொழிலாளர் களுக்கென எந்த நிதி ஒதுக்கீடும் புதிதாக இல்லை. இ-ஷ்ரம் எனும் இணையதளத்தின் மூலமாக முறைசாராத் தொழிலாளர்கள் பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்ட போதிலும் அவர் களுக்கான சிறப்பு நிதி எதுவும் இல்லை. கடந்த 2 ஆண்டு பெருந்தொற்று காலத்தில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக மாறியுள்ளனர். ஆக்ஸ்பாம் அறிக்கையின்படி இந்தியாவின் பெரும் பணக்காரக் குடும்பங்கள் 2021ல் உச்சநிலை யை எட்டியுள்ளன. இந்தியாவின் முதல் 10 மகா கோடீஸ்வரர்கள், நாட்டின் ஒட்டுமொத்த செல்வத்தில் 57 சதவீதத்தை தங்கள் கைவசம் குவித்து வைத்திருக்கிறார்கள். ஆனாலும் கூட அவர்கள் குவித்துள்ள செல்வம் மற்றும் லாபத்தின் மீது எந்தவொரு வரி விதிப்பிற்கான முன்மொழிவும் இந்த பட்ஜெட்டில் இல்லை. அவர்கள் மீது வரிவிதித்து அதன்மூலம் கிடைக்கும் நிதி  ஆதாரத்தைக் கொண்டு பெருவாரி யான மக்களுக்கு நிவாரணம் வழங்கும் எந்தத் திட்டமும் இல்லை. 

எனவே ஒன்றிய பட்ஜெட் 2022-23 எளிய குடிமக்களுக்கு நிவார ணம் அளிப்பதற்கான முன்னுரிமை களை அடையாளம் காணத் தவறி யிருக்கிறது. இது முற்றிலும் வஞ்சக மானதாகும். மிகப்பெரும் துரோக மாகும். எனவே இத்தகைய மக்கள்  விரோத -கார்ப்பரேட் ஆதரவு பட்ஜெ ட்டுக்கு எதிராக அனைத்துத் தரப்பு மக்களும் குரல் எழுப்புமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அழைப்பு விடுக்கிறது. துயரத்தில் சிக்கியிருக்கும் மக்களுக்கும், அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ.7500 நேரடி ரொக்கம் அளித்திட வேண்டும்; அனைத்து குடும்பங் களுக்கும் இலவச உணவுத் தொகுப்புகள் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலுவாக எழுப்பிட வேண்டும் எனவும் அழைப்பு விடுக்கிறது.