இந்தியாவின் ‘நடுநிலை’ அதிர்ச்சி அளிக்கிறது பாலஸ்தீன நாட்டின் காசா நக ரத்தில் இஸ்ரேல் நடத்தும் தாக்குத லில், பொது மக்களின் பாதுகாப்பு, சட்டரீதியான மற்றும் மனிதாபிமான கடமைகளை நிலைநிறுத்துதல் தொடர்பாகவும், ஐ.நா. பொதுச் சபை பெரும்பான்மையாக நிறை வேற்றிய தீர்மானத்தினை இந்தியா ஆதரிக்காமல் ஒதுங்கிக்கொண்டி ருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பெரும்பான்மை நாடுகள் ஏற் றுக்கொண்டுள்ள தீர்மானத்தை இந்தியா புறக்கணித்திருப்பது, அது எந்தளவிற்கு அமெரிக்க ஏகா திபத்தியத்தின் இளைய பங்காளி யாக மாறி, இந்திய வெளியுறவுக் கொள்கையை எந்தளவிற்கு சீர ழித்திருக்கிறது என்பதையும், அமெ ரிக்கா -இஸ்ரேல் - இந்தியா பிணைப்பு உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதையும் காட்டுகிறது. இது, இதுநாள் வரையிலும் பாலஸ்தீனப் பிரச்சனையில் இந் தியா, பாலஸ்தீனத்திற்கு ஆதர வாக இருந்துவந்த நிலையை மறுத லிக்கிறது. ஐ.நா. தீர்மானத்தை மதிக்க வேண்டும் ஐக்கிய நாடுகள் பொது அவை இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றி யுள்ள நிலையில், காசா பகுதியில் இனப்படுகொலை நடவடிக்கை களை வான் வழியாகவும், தரை வழியாகவும் இஸ்ரேல் நாடு தீவி ரப்படுத்தியுள்ளது. 22 லட்சம் பாலஸ்தீனர்கள் வாழும் காசா பகு தியில் அனைத்து தகவல் தொடர்பு களையும் துண்டித்துள்ளது. பெரும்பான்மை நாடுகளின் ஆதரவுடன் ஐ.நா. பொதுச்சபை யில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மா னத்தை மதித்து, உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். 1967 ஆம் ஆண்டுக்கு முந்தைய எல்லைகளுடன், கிழக்கு ஜெருசலேத்தை தலைநகராகக் கொண்ட பாலஸ்தீனம் (மேற்கு ஜெருசலேத்தை தலைநகராகக் கொண்டு இஸ்ரேல்) ஆகிய ‘இரு நாடுகள்’ என்ற பாதுகாப்புக் கவுன் சிலின் தீர்மானத்தை அமல்படுத்த ஐ.நா. தன்னை மீண்டும் முனைப் பாக்கிக்கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது. (ந.நி.)