புதுதில்லி, ஏப்.26- ஆறு முதல் 12 வயதுடைய குழந்தை களுக்கு, பாரத் பயோடெக் நிறுவனம் உரு வாக்கிய கோவாக்சின் தடுப்பூசி போட மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. 6 முதல் 12 வயது குழந்தை களுக்கு கோர்பிவாக்ஸ் (Corbevax) தடுப்பூசி யும், 12 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு ஜைகோவ்-டி (zycovD) தடுப்பூசியும் செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாட்டில், கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை, மக்களுக்குச் செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
இதற்கிடையே, 6 - 12 வயதுக்கு உட்பட்ட குழந்தை களுக்கு, கோவாக்சின் தடுப்பூசியை செலுத்து வதற்கு அனுமதி கோரி, பரிசோதனை முடிவுகளை யும், தரவுகளையும் சி.டி.எஸ்.சி.ஓ., எனப்படும், மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பிடம் சமர்ப்பித்து, ‘பாரத் பயோடெக்’ நிறுவனம் கடந்த ஆண்டு விண்ணப்பித்தது. இந்நிலையில், 6 முதல் 12 வயதுடைய குழந்தை களுக்கு அவசர காலத்தில் கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கு மத்திய மருந்து தர கட்டுப் பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. அதே போல், 6 முதல் 12 வயது குழந்தைகளுக்கு கோர்பிவாக்ஸ் தடுப்பூசியும், 12 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு ஜைகோவ்-டி தடுப்பூசி யும் செலுத்த மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. இந்தத் தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு எப்போது கிடைக்கும் என்பது பற்றிய எந்த விவரங்களையும் ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிடவில்லை.