புதுதில்லி, ஜன.10- தில்லியில் 300 காவலர்களுக்கு கொரோ னா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைநகர் தில்லியில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஞாயிறு வெளியிடப்பட்ட கொரோனா தொற்று பாதிப்பு நிலவரப்படி, புதிதாக 22,751 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தில்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,49,730 ஆக உயர்ந்துள்ளது. மேலும் திங்கள்கிழமை காலை எட்டு மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 17 பேர் தொற்றால் பலியாகி யுள்ளனர். இதுவரை தில்லியில் கொரோனா வால் 25,160 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 60,733 பேர் தொற்று பாதிப்பிற் கான சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தில்லியில் கூடுதல் ஆணையர் சின்மோய் பிஸ்வால் உள்பட 300 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை தில்லி காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தலைநகர் தில்லியில் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.