states

ஆகஸ்ட் 1-15 வரை அனைத்து கிளைகளிலும் கொண்டாடுவீர்!

புதுதில்லி, ஜூலை 18- இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டை கொண்டாடும் விதத்தில் ஆகஸ்ட் 1 முதல் 15 வரை  நாடு முழுவதும் கொண்டாட்ட நிகழ்வுகளை நடத்துமாறு அனைத்து கிளைகளுக்கும் மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக் குழு அறைகூவல் விடுத்துள்ளது. கட்சியின் அரசியல் தலைமைக் குழு கூட்டம்  புதுதில்லியில் ஜூலை 16 அன்று நடைபெற்றது. இதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கை யில் கூறப்பட்டுள்ள பல்வேறு அம்சங்கள் வருமாறு:

கிராமப்புற வேலைவாய்ப்பு  உறுதித் திட்டம்

ஒன்றிய அரசாங்கம் உடனடியாக மகாத்மா  காந்தி தேசியக் கிராமப்புற வேலைவாய்ப்பு உறு தித் திட்டத்திற்குப் போதிய நிதியை விடுவித்து, இத்திட்டத்தின்கீழ் வேலைசெய்தவர்களுக்கு ஏற்கனவே வேலைசெய்த நாட்களுக்கு ஊதி யம் அளித்திட வேண்டும். இத்திட்டத்திற்கான ஒதுக்கீட்டைக் கணிச மாக உயர்த்திட வேண்டும். அது ஒன்றுமட்டுமே இப்போது கோடிக்கணக்கான கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் வாழ்வாதாரங்களையும் அளித்துவருகிறது.

ஆதார் கட்டாயமாக்கப்படுவதை விலக்கிக்கொள்க!

ஒன்றிய அரசாங்கம், குழந்தைகளுக்கு அளித்துவரும் ஊட்டச்சத்துத் திட்டங்களுக்கு ஆதார் கட்டாயமாகப் பெற்றிருக்க வேண்டும் என்று கூறுவதை உடனடியாக விலக்கிக் கொள்ள  வேண்டும். போலி பயனாளிகளைக் களை  எடுக்கிறோம் என்ற பெயரில் பல லட்சக்கணக் கான குழந்தைகள் – 6 மாதங்களுக்கும் 6 ஆண்டு களுக்கும் இடையேயான குழந்தைகள் – 2013இல் பிறப்பிக்கப்பட்ட தேசிய உணவுப்  பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சட்டரீதியாகக் கிடைக்கப்பட வேண்டிய உணவு கிடைக்காமல்  மறுக்கப்படுகின்றனர். தற்போது, இந்தத் திட்டத்தின்கீழ் 7.9 கோடி குழந்தைகள் பயன்  பெற்று வருகிறார்கள். அதிகாரப்பூர்வ அறிக்கை யின்படி, இவர்களில் ஐந்து வயதுக்குக் கீழ்  உள்ள குழந்தைகளில் வெறும் 23 விழுக் காட்டினர் மட்டுமே ஆதார் அட்டைகளைப் பெற்றிருக்கிறார்கள். இன்றையதினம் இந்தியா உலகில் ஊட்டச்சத்துக் குறைந்த குழந்தை களைப் பெற்றிருப்பதில் மிக மோசமான நிலை யை எட்டியிருக்கிறது. 

கல்வி மீதான தாக்குதல்

கொரோனா பெருந்தொற்றுக்காலத்தில் போடப்பட்ட கட்டுப்பாடுகளைப் பயன்படுத்திக் கொண்டு, 2020 தேசிய கல்விக் கொள்கையை அரக்கத்தனமாகப் பின்பற்றுவதும், ஆன் லைன்  கல்வியை அறிமுகப்படுத்திட அனைத்துவிதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டதும் கல்வி யில் அழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான பள்ளிக்கூடங்கள் மூடப்பட்  டுள்ளன. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்க ளுக்கு வராமல் நின்றுவிடும் மாணவர்கள் எண்  ணிக்கை அதிகரித்திருக்கின்றது. கல்வியில் மதச்சார்பின்மை மற்றும் அறிவியல் மனப் பான்மைக்கு எதிராக அரக்கத்தனமான தாக்கு தல்கள் மிகவும் அருவருக்கத்தக்க விதத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

பழங்குடியினர் உரிமைகள் மீதான தாக்குதல்கள்

மோடி அரசாங்கம், வனப் பாதுகாப்புச் சட்டத்  தின் (Forest Conservation Act) கீழான  விதிகளில் திருத்தங்களைக் கொண்டுவந்து பழங்குடியினர் உரிமைகள் மீது விஷமத்தன மான தாக்குதல்களைத் தொடுத்திருக்கிறது. இந்தத் திருத்தங்கள் தனியார் கார்ப்பரேட்டு கள் வனங்களைச் சூறையாட வசதி செய்து  கொடுத்திருக்கின்றன. இந்த விதிகள் கிராம  சபைகளின் உரிமைகளை ஒழித்துக்கட்டி, பழங் குடியினர் மற்றும் காலங்காலமாக வனங்களில் வசித்து வருபவர்கள் வன நிலங்களில் பெற்  றுள்ள உரிமைகளை மறுக்கின்றன. பழங்குடி யினருக்கு அரசமைப்புச்சட்டம் அளித்துள்ள  உத்தரவாதங்களையும் இவை தெளிவான முறையில் மீறுகின்றன. இந்த விதிகள் உட னடியாகத் திரும்பப்பெறப்பட வேண்டும். 

குடிமை உரிமைகள் மீது அதிகரித்து வரும் தாக்குதல்கள்

டீஸ்டா செதல்வாத், ஜூபைர் முகமது மற்றும் பலருக்கு எதிரான வழக்குகள் உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று அரசி யல் தலைமைக்குழு வலியுறுத்துகிறது. இவர்  களின் கைதுகள் அரசாங்கத்திற்கு எதி ராகக் கருத்துக்கூறுபவர்களின் கழுத்தை நெரிப்  பதை நோக்கமாகக் கொண்டவை. இந்துத்துவா  அமைப்புகள் கட்டவிழ்த்துவிடும் பொய்ச் செய்திகளைத் தோலுரித்துக்காட்டி, மக்கள் மத்தியில் உண்மையைக் கூறுவோர் பாஜக  அரசாங்கங்களால் குறிவைத்துத் தாக்கப்படு வது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டி ருக்கிறது. மக்கள் மத்தியில் வெறுப்பை உமிழ்பவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை. மாறாக இதனை எதிர்ப்பவர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்படு கிறார்கள். வெறுப்பை உமிழ்பவர்களுக்கு அர சாங்கம் ஆதரவு அளிப்பது நிறுத்தப்பட வேண்டும்.

வெள்ளப் பாதிப்பு

நாட்டில் அஸ்ஸாம் மற்றும் பல பகுதிகளில் கடும் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டிருப்பதற்கு அரசியல் தலைமைக்குழு ஆழ்ந்த கவலை யைத் தெரிவித்துக்கொள்கிறது. அஸ்ஸாமில் வெள்ளம் ஏராளமான உயிர்களைப் பறித்து  கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. சொத்துக்கள் நாசமாகி இருக்கின்றன, பல  லட்சக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்தி ருக்கின்றனர். அதேபோன்று தெலுங்கானா, மகா ராஷ்டிரா, குஜராத் மற்றும் பல இடங்களிலும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. ஒன்றிய அரசாங்கம், பாதிக்கப்பட்ட மாநி லங்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அளித்திட போதிய அளவிற்கு நிதி உதவி மற்றும் பொருள் உதவிகளை உடனடியாக விடுவித் திட வேண்டும்.

அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளுக்குக் கண்டனம்

எவ்விதத்திலும் களங்கம் கற்பிக்கப்பட முடியாத அளவிற்கு நாட்டுப்பற்று மிகுந்த வரும் உலக அளவில் மதிக்கப்படக்கூடிய அறி ஞரும் முன்னாள் குடியரசுத் துணைத்தலைவரு மான ஹமீத் அன்சாரி அவர்கள் மீது ஆளும் பாஜக அரசாங்கம் அடிப்படையற்ற முறையில் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருப்பதற்கு அரசியல் தலைமைக்குழு கடும் கண்டனம் தெரி வித்துக் கொள்கிறது. இந்திய அரசமைப்புச்சட்டம் மற்றும் மதச்  சார்பற்ற ஜனநாயகக் குடியரசின்மீது உறுதி யாக இருந்துவரும் அன்சாரியைக் குறி வைத்தி ருப்பதை ஏற்க முடியாது.

கேரள நிகழ்ச்சிப் போக்குகள்

மத்திய விசாரணை முகமைகளை தவ றாகப் பயன்படுத்திக்கொண்டு கேரள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தைப் பல வீனப்படுத்திட மேற்கொள்ளும் முயற்சிகளை அரசியல் தலைமைக்குழு கடுமையாகக் கண்ட னம் செய்கிறது. மக்களின் பேராதரவைப் பெற்றி ருக்கும் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்  திற்கு எதிராக காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் இணைந்து செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.

இந்திய சுதந்திரத்தின் 75ஆம் ஆண்டு

நாட்டு மக்கள் மத்தியில் நம் மதச்சார்பற்ற ஜனநாயக அரசமைப்புக் குடியரசைப் பாது காத்திடவும், அரசமைப்புச்சட்டத்தைப் பாது காத்திடவும், ஜனநாயகம், ஜனநாயக உரிமை கள் மற்றும் குடிமை உரிமைகளைப் பாதுகாத்தி டவும் வரும் ஆகஸ்ட் 1-15 தேதிகளில் ஒட்டு மொத்த கட்சியும், இந்திய சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டைக் கொண்டாடும் விதத்தில், மிக விரிவான அளவில் திட்டங்களைத் தீட்டிட வேண்டும் என்று அரசியல் தலைமைக்குழு அறைகூவல் விடுக்கிறது.

தமிழில்: ச.வீரமணி