states

img

சிபிஎம் அகில இந்திய மாநாடு நகல் அரசியல் தீர்மானம் வெளியீடு

புதுதில்லி, பிப் 4 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 23வது மாநாடு கேரள மாநிலம் கண்ணூ ரில் 2022 ஏப்ரல் 6 முதல் 10 வரை  நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ள நகல் அரசியல் தீர்மானத்தை வெள்ளி யன்று புதுதில்லியில் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வெளியிட்டார். அப்போது அவர், கடந்த 8 ஆண்டு காலமாக இந்தியாவில் ஆட்சி நடத்தி வரும் பாஜக, மக்கள் மீதான எதேச்சதிகார தாக்குதல்களை அதிகரிக்கும் விதமாக மதவெறி சக்திகள் மற்றும் கார்ப்பரேட்டுகளின் கள்ளப் பிணைப்பை கூர்மையாக ஒருமுகப்படுத்தி வருகிறது. இது இந்திய குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக குணாம்சத்தை அடித்து வீழ்த்திக் கொண்டிருக் கிறது எனக் குறிப்பிட்டார். இத்தகைய அரசியல் பின்னணியில், பாஜகவை தனிமைப்படுத்தி முறி யடிப்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன் உள்ள பிரதானக் கடமை என்று குறிப்பிட்ட சீத்தாராம் யெச்சூரி, கார்ப்பரேட்டுகள் - மதவெறி சக்திகளின் கள்ளப் பிணைப்புக்கு எதிராக நாட்டின் அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் விரிவான முறையில் அணிதிரட்டுவது குறித்து கண்ணூர் மாநாடு விவாதிக்கும் என்று குறிப்பிட்டார். இந்நிகழ்வின் போது கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் ஹன்னன்முல்லா, பி.வி.ராகவலு, தபன்சென் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.