புதுதில்லி, பிப்.26- அமெரிக்க முதலாளிகளின் சுய லாபத்திற்காக, உலகை எந்நேரமும் பதற்றத்திலேயே வைத்திருக்க விரும்பும் அமெரிக்கா, இந்த முறை உக்ரைன் - ரஷ்யா இடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இந்த மோதலையே காரணமாக வைத்து, ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நேட்டோ கூட்டு நாடுகளும் இந்த தடைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால், ரஷ்யாவோடு வர்த்தக உறவு வைத்திருக்கும் நாடுகள் கடு மையான பொருளாதார பாதிப்பை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தியில், உலக அளவில், ரஷ்யா 10 சதவிகித பங்களிப்பைக் கொண்டிருக்கிறது. இயற்கை எரிவாயு உற்பத்தியிலும் ஐரோப்பிய அளவில் மூன்றில் ஒரு பங்கை ரஷ்யா கொண்டிருக்கிறது. இந்த இயற்கை எரிவாயுவை, உக் ரைன் வழியாகவே குழாய் மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்யா அனுப்பி வைத்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்க ஆத ரவு உக்ரைனுக்கும் - ரஷ்யாவுக்கும் இடையே ராணுவ மோதல் துவங்கி யுள்ள நிலையில், அது கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் விநியோ கத்தில் பாதிப்பை ஏற்படுத்தி, சர்வ தேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை 100 டாலர்களுக்கு மேலாக கொண்டு சென்றுள்ளது. இதனால், குறிப்பாக இந்தியா கடுமையான பாதிப்பை எதிர் கொள்ள உள்ளது. 2021-ஆம் ஆண் டில், இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 10 சதவிகி தத்தை (நாளொன்றுக்கு 43 ஆயி ரத்து 400 பீப்பாய்கள்) ரஷ்யாவிடமி ருந்து இறக்குமதி செய்தது. அதே போல 1.8 மில்லியன் டன் நிலக்கரி (இந்தியாவின் தேவையில் 1.3 சத விகிதம்) 2.5 மில்லியன் டன் இயற்கை திரவ எரிவாயுவையும் (LNG) ரஷ்யா விடமிருந்தே இறக்குமதி செய்தது. இந்நிலையில், உக்ரைன் - ரஷ்யா இடையிலான ராணுவ மோத லால் இறக்குமதி தடைப்பட்டு, இந்தி யாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் கடுமையாக உய ரும் நிலை எழுந்துள்ளது.
அதேபோல சமையல் எண் ணெய் விலைகளும் கடுமையாக அதிகரிக்கும் என்ற தகவல் வெளி யாகியுள்ளது. இந்தியா ஆண்டுக்கு சுமார் 2.5 மில்லியன் மெட்ரிக் டன் சூரிய காந்தி எண்ணெய்யைப் பயன் படுத்துகிறது. இது, பனை (8-8.5 mt), சோயாபீன் (4.5 mt) மற்றும் கடுகு (3 mt) ஆகியவற்றிற்குப் பிறகு நான்காவதாக அதிகம் நுகரப்படும் சமையல் எண்ணெய்யாக சூரிய காந்தி உள்ளது. இதில், 50 ஆயிரம் டன் சூரிய காந்தி எண்ணெய்யை சொந்த நாட்டில் உற்பத்தி செய்யும் இந்தியா, மீதமுள்ளவற்றை உக்ரைன் மற்றும் ரஷ்யாவிலிருந்தே பெரும்பகுதி இறக்குமதி செய்கிறது. வர்த்தக அமைச்சகத் தரவு களின்படி, சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி 2019-20 நிதியாண்டில் மொத்தம் 2.5 மில்லியன் டன்னாக வும், 2020-21 நிதியாண்டில் 2.2 மில்லி யன் டன்னாகவும் இருந்துள்ளது. இந்த மொத்த இறக்குமதியில், உக்ரைனிடமிருந்து மட்டும் 2019-20 நிதியாண்டில் 1.47 பில்லியன் டாலர் மதிப்பிலான 1.93 மில்லியன் டன் சூரியகாந்தி எண்ணெய்யும், 2020-21 இல் 1.6 பில்லியன் டாலர் மதிப்பி லான 1.74 மில்லியன் டன் சூரிய காந்தி எண்ணெய்யும் இறக்குமதி செய்யப்பட்டது. அதுபோலவே ரஷ்யாவிடமிருந்து, 2019-20 நிதி யாண்டில், 287 மில்லியன் டாலர் மதிப்பில் 0.38 மில்லியன் டன் சூரிய காந்தி எண்ணெய்யும், 2020-21 நிதியாண்டில் 235.89 மில்லியன் டாலர் மதிப்பில், 0.28 மில்லியன் டன் சூரியகாந்தி எண்ணெய்யும் இறக்கு மதி செய்யப்பட்டது.
“ஒட்டுமொத்தமாக கருங்கட லில் உள்ள உக்ரைன் மற்றும் ரஷ்யா துறைமுகங்களில் இருந்து ஒவ்வொரு மாதமும் சுமார் 2 லட்சம் டன் சூரியகாந்தி எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்கிறது. ஆனால், உக்ரைன் - ரஷ்யா இடை யிலான இந்த மோதலால் முழு வர்த்தகமும் இப்போது சீர்குலைந் துள்ளது” என்று மும்பையை தள மாகக் கொண்ட ‘சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா’வின் நிர்வாக இயக்கு நர் பி.வி. மேத்தா கூறுகிறார். உக் ரைன் ராணுவம் ஏற்கெனவே அதன் துறைமுகங்களில் வர்த்தக நட வடிக்கைகளை நிறுத்தி விட்டது குறிப்பிடத்தக்கது. கருங்கடலில் உள்ள ரஷ்ய துறை முகங்கள், தொழில்ரீதியாக திறந்தி ருந்தாலும், காப்பீட்டாளர்களால் விதிக்கப்படும் அதிக ஆபத்து பிரீ மியங்களைக் கருத்தில் கொண்டு கப்பல் உரிமையாளர்கள் வர்த்த கத்திற்கு தயாராக இல்லை. இதுஒருபுறமிருக்க, ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைக்கு முன்பே உலக அளவில் சூரியகாந்தி எண் ணெய் விலை உயரத் தொடங்கி விட்டது.
கச்சா சூரியகாந்தி எண்ணெயின் விலை (செலவு, காப்பீடு மற்றும் சரக்குச் செலவு உட்பட) ஒரு மாதத்திற்கு முன்பு, டன் ஒன்றுக்கு 1,455 டாலர்களாகவும், ஒரு வரு டத்திற்கு முன்பு 1,400 டாலர்களாக வும் இருந்தது. ஆனால், ராணுவ நடவடிக்கை துவங்குவதற்கு முன்ன தாக பிப்ரவரி 23 அன்று, மும்பை யில் இறக்குமதி செய்யப்பட்ட கச்சா சூரியகாந்தி எண்ணெய்யின் விலை டன்னுக்கு 1,630 டாலர்களாக உயர்வைக் கண்டிருந்தது. சூரியகாந்தி எண்ணெய் மட்டு மல்லாமல், மும்பையில் இறக்கு மதி செய்யப்பட்ட கச்சா பாமாயில் விலை டன் ஒன்றுக்கு 1,810 டாலர்களாகவும், டி-கம்மிட் சோயா பீன் எண்ணெய்யின் விலை 1,777 டாலர்களாகவும் உயர்ந்திருந்தது. இதனிடையே, தற்போது உக்ரைன் - ரஷ்யா இடையே மோதல் எழுந்துள்ள பின்னணியில், பெட்ரோல், டீசல், சமையல் எரி வாயு விலையும், சூரியகாந்தி எண்ணெய், கச்சா பாமாயில் எண்ணெய், டி-கம்மிட் சோயாபீன் எண்ணெய் என அனைத்து சமை யல் எண்ணெய்களின் விலைகளும் மேலும் பல மடங்கு உயரும் அபா யம் எழுந்துள்ளது.