states

img

வெளிநாட்டில் படித்த 90% மருத்துவர்கள் தகுதித்தேர்வுக்கு கூட லாயக்கில்லை

புதுதில்லி, மார்ச் 2- உக்ரைனில் நடந்த குண்டு வீச்சில் இந்தியாவைச் சேர்ந்த மருத்துவ மாணவர் நவீன் பலியா னது, நாட்டில் துயரத்தை ஏற்படுத்தி யுள்ளது.  இந்நிலையில், “வெளிநாட்டில் படிப்பை முடித்தவர்கள் இந்தி யாவில் நடத்தப்படும் தகுதித் தேர் வை எழுதக்கூட லாயக்கு இல்லா தவர்களாக உள்ளனர்” என்று பேசி ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளார். உக்ரைன் - ரஷ்யா இடையே யுத்தம் ஏற்படலாம் என்று கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சர்வ தேச ஊடகங்கள் எச்சரித்து வந்தன. குறிப்பாக, பிப்ரவரி 15-இல் மோத லுக்கான சாத்தியக் கூறுகள் நன் றாக தெரிந்து விட்டன.  எனினும், அலட்சியத்துடன் நடந்துகொண்ட மோடி அரசு, உக் ரைனில் இருக்கும் இந்திய மாண வர்களை மீட்பதற்கு, சுமார் ஒரு வாரம் தாமதமாக பிப்ரவரி 22-ஆம் தேதிதான் முதல் விமானத்தை அனுப்பியது. ஆனால், அதற்குள் மோதல்கள் துவங்கி விட்டதால், மாணவர்களை மீட்க முடிய வில்லை. அதன்விளைவு மாணவர் நவீன் தற்போது குண்டுவீச்சு தாக்கு தலில் சிக்கி உயிரிழந்துள்ளார். இந்நிலையில், ‘‘வெளிநாடு களில் மருத்துவம் பயின்றுவரும் இந்தியர்களில் 90 சதவிகிதம் பேர் இங்கு இந்திய அரசால் நடத்தப் படும் தகுதித் தேர்வில் (Foreign Medical Graduates Examination -FMGE) வெற்றி பெறுவதில்லை” என்று நாடாளுமன்ற விவகா ரங்கள் துறை அமைச்சர் பிரக லாத் ஜோஷி சர்ச்சையைக் கிளப்பி யுள்ளார். அதேநேரம் இந்திய மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு, இந்தியாவிலுள்ள அதிகமான கல்விக் கட்டணமே காரணம் என்பதையும் போகிற போக்கில் அவர் ஒப்புக் கொண் டுள்ளார்.