லக்னோ, ஜன.5- பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, கடந்த திங்களன்று லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது, “உத்தரப்பிர தேசத்தில் ஒரு புதிய தலைவா் (பிரியங்கா), நான் ஒரு பெண்; என்னால் போராட முடியும்’ எனக் கூறுகிறார். ஆனால், பெண்கள் திறந்தவெளியில் இயற்கை உபா தையைக் கழிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது குறித்து அவர்கள் ஏன் வெட்கப்படவில்லை? எங்க ளது ஆட்சியில் 11 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகள் கட் டப்பட்டுள்ளன; கண்ணியத்துடன் வாழும் உரிமையை பெண்கள் பெற்றுள்ளனர்” என்று காங்கி ரசை விமர்சித்தார். இந்நிலையில், லக்னோவில் செவ்வாயன்று செய்தியாளர் களைச் சந்தித்த காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் சுப்ரியா ஷனரிடே, நட்டாவுக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.
“’நான் ஒரு பெண்; என்னால் போராட முடியும்’ என்ற வலு வான முழக்கத்தையும், உத்தரப் பிரதேச பெண்களின் குரலையும் பாஜக தலைவர் நட்டா கேலி செய்துள்ளார். இது காங்கிரசின் குரல் அல்ல; தமது உரிமைகளுக் காகப் போராட விரும்பும் உத்தரப் பிரதேசத்து பெண்கள் ஒவ்வொரு வரின் குரல். பெண்கள் அதி காரம் பெறுவதில் நட்டாவுக்கும், அவரது கட்சிக்கும் என்ன பிரச் சனை? ஏன் அவர்கள் அஞ்சுகிறார் கள்? சமூகத் தீமைகளையும், நட்டாவைப் போன்றோரின் மனப்பான்மையையும் எதிர்த்து இன்று பெண்கள் போராடி வருகிறார்கள். கல்வி, குடும்பம், வேலைவாய்ப்புகளில் சமத்து வத்துக்காக அவர்கள் போராடி வருகிறார்கள். பெண்களை ஒரு கழிப்பறை, ஒரு எரிவாயு சிலிண்ட ரில் அடைத்துவைக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் எண் ளம். உத்தரப்பிரதேச பேரவைத் தேர்தலில் போட்டியிடவும், வேலைவாய்ப்பிலும் 40 சதவிகித பெண்களுக்கு வாய்ப்பளிக்கப் படும் என காங்கிரஸ் சார்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. பாஜக இதைச் செய்யுமா?” என்று சுப்ரியா ஷனரிடே கேள்வி எழுப்பி யுள்ளார்.