காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ யாத்திரை’ காஷ்மீரில் நுழைந்துள்ள நிலையில், இந்த யாத்திரைக்கு, லகான்பூரில் வெள்ளியன்று காலை பரூக் அப்துல்லா தனது தொண்டர்களுடன் வரவேற்பு அளித்தார். காஷ்மீரில் தனக்கு அளிக்கப் பட்ட வரவேற்பை ஏற்றுக்கொண்டு பேசிய ராகுல் காந்தி, “இது எனக்கு வீடு திரும்புதல் அனுபவத்தை தந்துள்ளது. நான் என் வேர்களை வந்தடைந்துள்ளேன். எனக்கு ஜம்மு - காஷ்மீர் மக்களின் வேதனை தெரியும். உங்களின் அந்த வேதனையைப் பகிர்ந்து கொள்ளவே இங்கே வந்திருக் கிறேன்” என்று தனது நெகிழ்ச்சியை வெளிப் படுத்தியுள்ளார்.