அமித்ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் நோட்டீஸ்
கடந்த 2008இல் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி சந்தித்த மகாராஷ்டிர விவசாய கைப்பெண்ணான கலாவதி பண்டுர்கரை சந்தித்தார். இந்த சந்திப்பு பற்றி அவதூறு பரப்பும் விதமாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் பேசினார். இந்த பேச்சு நாடாளு மன்றத்தை தவறாக வழிநடத்துவதாகவும், சிறப்புரிமை மீறலாக இருப்பதாகவும் அமித் ஷாவிற்கு எதிராக மக்களவை யில் காங்கிரஸ் வியாழனன்று நோட்டீஸை அளித்தது. இந்த நோட்டீஸை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவையின் காங்கிரஸ் கொறடாவுமான மாணிக்கம் தாகூர் அளித்தார்.
பழங்குடியினரை பாஜக அவமதிக்கிறது: ராகுல்
உலக பழங்குடியினர் தினமான புதன்கிழமையன்று, பழங்குடி யினர் அதிகம் வாழும் பன்ஸ்வாரா மாவட்டத்தின் மங்கர் தாம் பகுதியில் காங்கிரஸின் பிரச்சார தொடக்கக் கூட்டம் நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி பங்கேற்றுப் பேசினார். அப்போது, பழங்குடியினரை ‘ஆதிவாசி’ என்ப தற்குப் பதிலாக ‘வனவாசி’ என்று பாஜக அழைக்கிறது. இது, அந்த சமூகத்தின ருக்கு அவமதிப்பாகும். பழங்குடியினர் வாழும் காடுகளை அவர்களிடமிருந்து பறித்து, அதானிக்கும் வழங்குகிறது என்று ‘அவர் குற்றம் சாட்டினார்.
அமைச்சர் ரகுபதி மீதான போராட்ட வழக்கு ரத்து
சென்னை, ஆக. 10- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அனுமதி பெறா மல் போராட்டம் நடத்தியதாக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி மற்றும் திமுகவினர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்ன மராவதி பேருந்து நிலையத்தில் 5.4.2018இல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது தொடர்பாக அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அமைச்சர் ரகுபதி உட்பட 5 பேர் மீது பொன்னமராவதி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி 5 பேரும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு வியாழனன்று (ஆக. 10) விசாரணைக்கு வந்தது. மனு தாரர்கள் சார்பில் வழக்கறிஞர் பி.கண பதி சுப்பிரமணியன் வாதிட்டார். விசார ணைக்கு பிறகு அமைச்சர் ரகுபதி உள்ளிட்ட 5 பேர் மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
தக்காளி விலை மேலும் குறையும்: வியாபாரிகள்
சென்னை, ஆக.10- கோயம்பேடு காய்கறி சந்தைக்கு 40 லாரிகளில் தக்காளி கொண்டுவரப் பட்டு விற்பனையில் இறக்கப்பட்டதால் விலை மேலும் குறைந்தது. விலை அதிகரிப்புக்கு பிறகு கடந்த ஒரு மாதத்துக்கு பின்னர் தக்காளி வரத்து 40 லாரியாக உயர்ந்துள்ளது. இதனால் தக்காளி விலை மேலும் குறைந்து மொத்த விற்பனை கடை களில் முதல் ரக தக்காளி ஒரு கிலோ ரூ.65-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெளிச் சந்தையில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிலோ ரூ.200 வரை சென்று உச்சம் தொட்ட தக்காளியின் விலை குறைந்து வருவது இல்லத்தரசிகள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது. கோயம் பேடு சந்தைக்கு நாள்தோறும் தக்காளி யின் வரத்து அதிகரித்து வருவதால் அதன் விலை மேலும் படிப்படியாக குறை யும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ள னர்.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்
சென்னை, ஆக. 10- சென்னை சென்ட்ரல் ரயில் நிலை யத்தில் வியாழக்கிழமை அதிகாலை தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இறங்கிய பயணிகளை ரயில்வே காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான பயணி ஒருவரை பிடித்து காவல் துறை யினர் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்த தால், அவரது உடமைகளை சோதனை செய்தனர். அப்போது அதில் 5 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் தேனி மாவட்டத் தைச் சேர்ந்த நிதிஷ் குமார் (21) என்பது தெரிய வந்தது. இதையடுத்து காவல் துறையினர் அவரை கைது செய்து அவரி டம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த னர்.