காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா காந்தி
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகள், நிலம், வாழ்வாதாரங்கள் என அனைத் தையும் இழந்துவிட்டனர். ஆனால் அவர்களது கடனை அரசு தள்ளுபடி செய்ய மறுத்து கடன் மறுசீரமைக்கப்படும் என்று கூறுகிறது. இது நிவார ணம் அல்ல. துரோகம். இந்த அக்கறையின் மையை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம்.
பத்திரிகையாளர் சுஷாந்த் சிங்
கச்சா எண்ணெய்யின் விலை குறைந்துள்ளது. இதன் பலன்கள் நுகர்வோருக்கு கிடைக்கும் வகையில் இல்லை. மாறாக அது எப்போதும் அரசாங்கத்தின் கஜானாவை நிரப்பவே பயன்படுகிறது.
பீகார் முன்னாள் துணை முதல்வர், தேஜஸ்வி
“குற்றவாளிகளின் அரசாங்கம், குற்றவாளிகளுக்காக”.சில நாட்களில் நூற்றுக்கணக்கான கொலைகள் நடந்தாலும் சீர்குலைந்துள்ள சட்டம் ஒழுங்கு குறித்து பீகார் முதல்வர் வாயில் இருந்து ஒரு வார்த்தை கூட வரவில்லை.
கேரள முன்னாள் நிதியமைச்சர் தாமஸ் ஐசக்
டிரம்ப் வரிகளை 90 நாள் இடைநிறுத்தி யுள்ளார். இது உலகப் பொருளாதாரத்தில் அவரது வரிகளால் ஏற்கனவே ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பை மாற்றாது. டிரம்பால் உருவாக்கப்பட்ட வரிக் கொள்கை மற்றும் நிச்சயமற்ற தன்மை உலகளாவிய மந்தநிலையைத் தூண்டப் போகிறது.