புதுதில்லி, ஜன.17- காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டுவிட்டரில் தன்னைப் பின்தொடர்வோரி டம் ஆன்லைன் கருத்துக் கணிப்பு ஒன்றை கடந்த சனிக்கிழமையன்று நடத்தினார். அதில், பாஜக அரசின் பெரிய குறை பாடு எது? என்ற கேள்வியை எழுப்பி, ‘வேலையின்மை, வரிப் பறிப்பு, விலை உயர்வு மற்றும் வெறுப்பு சூழல்’ ஆகிய நான்கை விருப்பப் பதில்களாக வழங்கி யிருந்தார். இந்நிலையில், கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 3 லட்சத்து 47 ஆயிரத்து 396 பேர், (35 சதவிகிதம்) ‘வெறுப்புச் சூழல்’ என்ற பதிலை அளித் தனர். அதற்கடுத்து, அரசாங்கத்தின் இரண்டாவது பெரிய தோல்வியாக வேலையின்மையை 28 சதவிகிதம் பேர் குறிப்பிட்டிருந்தனர். 19.28 சதவிகிதம் பேர் பணவீக்கம் என்றும், 17.2 சதவிகி தம் பேர் வரிப் பறிப்பு என்றும் தெரி வித்திருந்தனர். இதையடுத்து, கருத்துக் கணிப்பு முடிவுகளை அடிப்படையாக வைத்து புதிய பதிவு ஒன்றை டுவிட்டரில் ராகுல் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி யிருப்பதாவது: ‘பாஜக நடத்தி வரும் வெறுப்பு ணர்வைத் தூண்டும் அரசியல் நாட் டுக்கு மிகப்பெரிய கேடாக உருவெடுத்து வருகிறது. நாட்டில் தொழில் நடத்த விரும்புபவர்களும், வெளிநாட்டு முத லீட்டாளர்களும் உள்நாட்டில் அமைதி யான சூழல் இருக்க வேண்டும் என்று தான் விரும்புவார்கள். ஆனால், சகோ தரர்களாக ஒற்றுமையாக வாழ்ந்து வரும் இந்நாட்டு மக்களிடையே தனது குறுகிய அரசியல் நலன்களுக்காக பாஜக பிரிவினையையும், வெறுப்பு ணர்வையும் விதைத்து வருகிறது. இது தொடர்ந்தால் நாட்டில் அமைதியற்ற சூழல் நிலவும். இதனால் புதிய தொழில்கள் ஏதும் உருவாகாது. இத னால் வேலையின்மையும் அதிகரிக்கும். மொத்தத்தில் பாஜகவின் இந்த வெறுப் புணர்வு அரசியல் நாட்டுக்கு பெருங் கேடாக அமையும். விலைவாசி உயர்வு, வேலையின்மை, வரிகள் மூலம் மக்கள் பணத்தைப் பறிப்பது உள்ளிட்டவை தான் பாஜக அரசின் மிகப்பெரிய சாத னைகளாக உள்ளன’ என்று அவர் குறிப் பிட்டுள்ளார்.