புதுதில்லி, ஆக.11- தேர்தல் ஆணையத்தைக் கட்டுப்படுத்திட, மோடி அர சாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை களுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரி வித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு களை மறுதலிப்பதன் மூலம் அர சமைப்புச் சட்டத்தால் அளிக்கப்பட்டுள்ள நீதித்துறையின் சுதந்திரத்தையே மோடி அரசாங்கம் அரித்துவீழ்த்திக் கொண்டிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடும் கண்ட னத்தை தெரிவித்துக் கொள்கிறது. உச்சநீதிமன்றத்தின் அர சமைப்புச்சட்ட அமர்வாயம், அதனு டைய தீர்ப்பு ஒன்றில், தலைமைத் தேர்தல் ஆணையரும், தேர்தல் ஆணையர்களும் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவால் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறது. இப்போது மோடி அரசாங்கம் ஒரு சட்டமுன்வடிவை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதன்படி, ‘உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி’ என்பதற்குப் பதிலாக ‘பிரதமரால் நியமனம் செய்யப்படும் ஒன்றிய கேபினட் அமைச்சர் ஒருவர்’ என்று மாற்றப்பட்டிருக்கிறது. இது, ஆட்சி புரிபவர்களின் பெரும்பான்மை கருத்தையே எப்போதும் உத்தர வாதப்படுத்திடும். இது, தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தையும் பாரபட்சமற்ற நிலையினையும் அழித்திடும்.
ஆட்சியாளர்களின் நிர்ப் பந்தத்திற்கும், செல்வாக்கிற்கும் அடிபணியாது, “சுதந்திரமாகவும் நேர்மையாகவும் தேர்தல்களை நடத்திடும்” பாரபட்சமற்ற தேர்தல் ஆணையம் அமைந்திட வேண்டும் என்றே இந்திய அரசமைப்புச் சட்டம் கட்டாயப்படுத்துகிறது. தில்லி அரசாங்கத்தின் அதிகாரங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்புச்சட்ட அமர்வாயம் அளித்திட்ட தீர்ப்பினை மோடி அரசாங்கம் மறுதலித்துள்ள நிலையில், இப்போது இந்த நடவடிக்கை யை மோடி அரசாங்கம் எடுத்திருக் கிறது. மோடி அரசாங்கம் முதலில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை செல்லாததாக்கி ஓர் அவசரச்சட்டம் பிறப்பித்தது. பின்னர் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறது. அரசின் அனைத்து சுதந்திரமான அங்கங்களையும் கட்டுப்படுத்திட மோடி அரசாங்கம் மேற்கொண்டுள்ள நட வடிக்கைகள் மிகவும் அரு வருக்கத்தக்கதும், வெறுக்கத்தக்க துமாகும். நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தச் சட்டமுன்வடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. இந்தச் சட்டமுன்வடிவை நிறை வேறாமல் முறியடித்திட, அர சமைப்புச்சட்டத்தினைப் பாது காத்திடவும் உயர்த்திப்பிடித்திட வும் உறுதிபூண்டுள்ள அனைத்துக் கட்சிகளும் முன்வர வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுக்கிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (ந.நி.)