புதுதில்லி, பிப். 25 - உக்ரைனில் தவிக்கும் இந்தியர் களை அழைத்து வர, சரியான நட வடிக்கைகளை எடுக்க மோடி அரசு தவறி விட்டதாக காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை சுர்ஜேவாலா பதி விட்டுள்ளார். “போர் மூண்டுள்ள உக்ரைனில் வசித்து வரும் 20 ஆயிரம் இந்திய இளைஞர்களை, அவரவர் இடத்தி லேயே இருக்குமாறு ஒன்றிய அரசு கூறி யுள்ளது. அவர்களை உரிய நேரத்தில் இந்தியாவுக்கு அழைத்துவர நட வடிக்கை எடுக்கவில்லை. பிரதமர் மோடி, தேர்தல் பிரச்சாரத் தில்தான் தீவிர கவனம் செலுத்தினார். அதனால், உக்ரைனில் இந்தியர்கள் அச்சத்தின் பிடியில் வாழும்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்களது பாது காப்பில் மோடி அரசு அக்கறை செலுத்த வில்லை. அவர்களை பத்திரமாக சரியான நேரத்தில் அழைத்து வர ஏன் ஏற்பாடு செய்யவில்லை? இதுதான் சுயசார்பு பணியா?. சிக்கலான தருணங்களில் முகத்தை திருப்பிக் கொள்வதும், மவுனம் சாதி பதும் மோடி அரசின் வாடிக்கையாகி விட்டது.” இவ்வாறு சுர்ஜேவாலா கேட்டுள்ளார்.