லக்னோ, ஜன.31- உள்துறை அமைச்சர் அமித் ஷா, எச்சிலைத் தடவித் தடவி துண்டறிக்கையை விநி யோகித்தது சர்ச்சையை ஏற் படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, ஆளும் பாஜகவும் மற்றும் எதிர்க்கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமையன்று உத்த ரப்பிரதேச மாநிலம் கவுதம புத்த நகர், மீரட், தாத்ரி உள் ளிட்ட இடங்களில் ஒன்றிய அர சின் உள்துறை அமைச்சர் அமித் ஷா வீடு வீடாகச் சென்று தேர் தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அமித் ஷா முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின் பற்றாமலும் கொரோனா விதி முறைகளை மீறியதுடன், துண் டறிக்கையை எச்சிலைத் தடவித் தடவி பொதுமக்க ளுக்கு வழங்கியுள்ளார். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூகவலைதளங்க ளில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘இது வீட் டுக்கு வீடு பிரச்சாரம் கிடை யாது, வீட்டுக்கு வீடு எச்சில் விநியோகம் என்று சமூக வலைதளவாசிகள் கிண்டல டித்து வருகின்றனர். கொரோனா தடுப்பு வழி காட்டு நெறிமுறைகளை வெளியிடும் ஒன்றிய உள் துறை அமைச்சகத்தின் அமைச்சரே, இவ்வாறு முகக் கவசம் அணியாமல், எச்சி லைத் தொட்டு துண்டு பிரசு ரங்களை விநியோகம் செய் யலாமா? என கேள்வி எழுப் பிய சமூக ஆர்வலர்கள், அமித்ஷாவின் இத்தகைய செயல்பாடுகள் கொரோனா தொற்று ஆபத்து அதிகரிக்கும் என்று எச்சரிக்கை விடுத் துள்ளனர்.