states

img

நிலக்கரி தட்டுப்பாடு; மின் உற்பத்தி பாதிப்பு

கொச்சி, செப். 6- மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி இல்லா ததால் நாடு மீண்டும் மின்சார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. மத்திய மற்றும் வட மாநிலங்களில், மின் கட்டுப்பாடு மறைமுகமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இறக்குமதி நிலக்கரியை நம்பி நெருக்கடியை சமாளிக்கும் முயற்சியை ஒன்றிய அரசு தொடங்கி யது. வெளியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 4 சதவிகித நிலக்கரியுடன் உள்நாட்டு நிலக்கரியையும் பயன்படுத்த ஆலைகளுக்கு மத்திய மின்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் பெரும்பாலான நாட்களில் நாட்டில் மின் நுகர்வு 200 ஜிகாவாட்டிற்கு மேல் இருந்தது. செப்டம்பர் 1ஆம் தேதி வரலாற்றில் அதிகப் பயன்பாட்டைப் பதிவு செய்தது (240 ஜிகாவாட்). தினசரி உற்பத்தியில் இரண்டு லட்சம் டன் நிலக்கரி பற்றாக்குறை உள்ளது. ஆகஸ்ட் 2022 உடன் ஒப்பிடும்போது பயன்பாட்டின் அதி கரிப்பு 21 சதவீதம் ஆகும். மத்திய மின்சார ஆணை யத்தின் மதிப்பீட்டின்படி, அக்டோபர் முதல் மார்ச்  2024 வரை மின் உற்பத்திக்கு 40.4 கோடி டன் நிலக்கரி தேவைப்படுகிறது.

இந்த நிலையில்தான் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை பயன்படுத்தி உற்பத்தியை மேற்கொள்ள  அறிவுறுத்தப்பட்டது. சுரங்கங்களில் இருந்து நிலக்கரியை மின் உற்பத்தி நிலையங்களுக்கு கொண்டு செல்ல ரயில் போக்குவரத்து வசதி இல்லாததுதான் பிரச்சனை என்பது அதிகாரப்பூர்வ விளக்கம். அதிகரித்து வரும் நுகர்வுக்கு ஏற்ப நிலக்கரி மற்றும் மின் உற்பத்தி வளர்ச்சியில் சரிவு ஏற்பட்டுள்ளது. இதுவும்  நெருக்கடிக்குக் காரணம். அக்டோபர் மாதத்தில் நிலைமை மோசமாகும் என சுட்டிக்காட்டப்படுகிறது. தென் மாநிலங்கள் தவிர்த்து இதர மாநிலங்களில் பண்டிகை மற்றும் விவசாய காலம் தொடங்குவ தால், மின் தேவை பெருமளவில் உயரும். இறக்கு மதி செய்யப்பட்ட நிலக்கரியைப் பயன்படுத்துவ தால் கேஎஸ்இபி உள்ளிட்ட விநியோக நிறுவனங் களும் பாதிக்கப்படும். விநியோக நிறுவனங்களின் கொள்முதல் செலவு உயரும். கூடுதல் கட்டணம் எரிபொருள் கூடுதல் கட்டணமாக பயனர்களிடம் வசூலிக்கப்படும் ஆபத்து உள்ளது.