states

img

இமாச்சலப் பிரதேசத்தில் மேக வெடிப்பு : வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 21 பேர் பலி

சிம்லா, ஆக. 14- இமாச்சலப் பிரதேசத்தில் மேக வெடிப்பு காரணமாக வெள்ளம் நிலச்சரிவில் சிக்கி 21 பேர் பலியாகியுள்ளனர்.  பருவமழையால் வட மாநிலங்கள் மழையால் தத்தளித்து வரும் நிலையில், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள் ளன. ஞாயிறன்று இரவு இமாச்சலப் பிர தேசத்தின் சோலன் மாவட்டத்தில் ஜடோன்  கிராமத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பால் ஏற்பட்ட மிரட்டல் மழையால் வெள்ளத்தில் இரண்டு வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்த நிலையில், 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக சோலன் பிரிவு ஆணையர் மன்மோகன் சர்மா தெரிவித்துள்ளார்.  மேலும் சிம்லாவில் சம்மர்ஹில் பகுதியில்  உள்ள ஒரு சிவன் கோயில் இடிந்து விழுந்த தில் 9 பேர் உயிரிழந்தனர். சம்பவம் நடந்த போது கோயிலில் 50 பேர் இருந்ததாகத் தெரி கிறது. சம்பவ இடத்தில் தீயணைப்புத் துறை யினர், மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த  24 மணிநேரத்தில் இமாச்சலில் 21 பேர் பலியாகியுள்ளனர். இமாச்சலில் மட்டும் பரு வமழை தொடங்கியதிலிருந்து இதுவரை  250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், மழை, வெள்ளம், நிலச்சரிவால் ஏற்பட்ட சேதங்களின் மதிப்பு ரூ.7000 கோடி என்று அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சீத்தாராம் யெச்சூரி இரங்கல்

இமாச்சலப் பிரதேசத்தில் கனமழையில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது டுவிட்டர் பக்கத்தில், “இமாச்சலப் பிரதேசத்தில் பருவ நிலை பாதிப்புகள் பேரழிவை ஏற்படுத்தி வரும் நிலையில், பெரும் உயிர் சேதம், பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. கந்தகாட்டில்  இருந்து 7 உடல்களும், சம்மர் ஹில்  சிம்லாவில் 9 உடல்களும் மீட்கப்பட்டன. மேலும் பலர் நிலச்சரிவில் புதையுண்டுள்ள தாக அஞ்சப்படுகிறது. இதனால் மாநில  அரசு மற்றும் தேசிய பேரிடர் மீட்பு/செயல்பாடுகளை விரைவுபடுத்த வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்” என அவர் கூறியுள்ளார்.