புதுதில்லி, நவ.2- மோர்பி தொங்கு பால விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு சிஐடியு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென் வெளியிட்டு ள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: குஜராத் மாநிலம் மோர்பி தொங்கு பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 47 குழந்தைகள், 50-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 142 பேர் பலியாகி யுள்ள பெரும் துயரம் நிகழ்ந்துள்ளது. இதில் உயிரிழந்த 142 பேருக்கும் சிஐடியு தனது ஆழ்ந்து இரங்கலையும், அவர்களது குடும்பங்களுக்கு அனுதாபங்களையும் தெரிவிக்கிறது. இந்த பாலம் விபத்தில் பலி எண்ணி க்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. தனியார் கார்ப்பரேட் நிறுவனங் களுக்கு ஒன்றிய - மாநில அரசுகள் எந்த கட்டுப்பாடும் விதிக்காமல், பொது உள்கட்டமைப்புப் பணிகளை தனியார் ஒப்பந்ததாரரிடம் விடுவதே இத்தகைய மனித பேரழிவுகளுக்கு வழிவகுக்கிறது. மோர்பி தொங்கு பால புனரமைப்பு பணிகளை மேற் கொண்ட ‘ஒரேவா குழுமம்’ சிஎப்எல் பல்புகள், சுவர் கடிகாரங்கள் மற்றும் இ-பைக்குகளை தயாரிக்கும் கம்பெனி ஆகும். பொதுப் பணித் துறை கட்டமைப்புகளில் எந்த நிபு ணத்துவமும் இல்லாத இந்த தனியார் நிறுவனத்துடன், பழுதடைந்த தொங்கு பாலத்தை புனரமைக்க 15 ஆண்டு களுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள் ளது. மேலும், பாலத்தை பயன்படுத்து வதற்கு ரூ.10 முதல் ரூ.15 வரை கட்ட ணம் வசூலிக்கப்படுகிறது.
இந்தப் பாலத்தின் உறுதித்தன்மை குறித்து கேள்விகள் எழுகின்றன. பாலத்தை பயன்படுத்த முடியுமா என ஆய்வு செய்த பிறகு வழங்கப்படும் உறுதித்தன்மை சான்றிதழை, மோர்பி நகராட்சி நிர்வாகத்திடமிருந்து இந்த நிறுவனம் பெறவில்லை. இவை அனை த்தும், பல்வேறு மட்டங்களில் அரசு நிர்வாகத்தின் தோல்வியை வெளிச்ச மிட்டுக் காட்டுகின்றன. குஜராத் அரசு, மாநிலத்தின் பொதுப் பணித்துறை பணிகளை முழு ஈடுபாட்டுடன் முறை யாக கவனித்திருந்தால், இந்த மிகப்பெரும் துயரச் சம்பவத்தை தவிர்த்திருக்க முடியும். குஜராத் மாநில முதல்வர்தான் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சராகவும் உள்ளார். அவரது கட்டுப்பாட்டில்தான் இவை உள்ளன. இந்த மிகப்பெரும் மனித இழப்பிற்கு அம்மாநில முதல் வர்தான் பொறுப்பேற்க வேண்டும். பலியானோருக்கு இரங்கல் தெரிவிப்பது மட்டுமின்றி, இந்த துயர நிகழ்வு குறித்து உயர்மட்ட அதிகாரி கள் அல்லது ஓய்வு பெற்ற நீதிபதிகள் மூலம் முழுமையான ஆய்வு நடத்தி, அதற்கு பதிலளிக்க வேண்டும் எனவும் சிஐடியு வலியுறுத்துகிறது. மேலும், இந்த சம்பவத்திற்கு காரணமாக உள்ள, ஒப்பந்தம் விடப்பட்ட நிறுவனத்தின் ஒரு சில அதிகாரிகள் மற்றும் காவலர்களை மட்டுமே குஜராத் மாநில அரசு கைது செய்துள்ளது. இது அம்மாநில அரசின் மனிதாபிமானமற்ற தன்மையைக் காட்டுகிறது. பொது உள்கட்டமைப்பு பணிகளை சீரமைக்கிறோம் அல்லது பராமரிக்கிறோம் என்ற பெயரில் ஒப் பந்தங்களை தனியாரிடம் விடுவதை முற்றிலும் நிறுத்த வேண்டும். முத லீடுகள் மற்றும் துறைகளை வலுப் படுத்துவதில் மாநில அரசு தலையிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.