சந்திரசேகர ராவ் மகன் தலைமறைவு; தெலுங்கானாவில் பரபரப்பு
உயிருடன் இருக்கும் வரை பிஆர்எஸ் கட்சியை பாஜகவுடன் இணைக்க விட மாட்டேன்: கவிதா
ஹைதராபாத் தெலுங்கானா மாநி லத்தின் எதிர்க்கட்சி யாக இருப்பது பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சி ஆகும். இதன் தலைவ ராக சந்திரசேகர ராவ் உள்ளார். மாநில பிரிவினைக்கு பிறகு சந்திரசேகர ராவ் 9 ஆண்டுகள் தெலுங்கானா முதலமைச்சராக இருந்தவர். இந்நிலையில், பிஆர்எஸ் கட்சியை பாஜவுடன் இணைக்க தனது சகோதரர் கே.டி.ராமா ராவ் முயற்சி செய்து வருகிறார் என சந்திரசேகர ராவின் மக ளும், எம்எல்சி-யுமான கவிதா குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக கவிதா மேலும் கூறு கையில்,”மதுபான கொள்கை ஊழல் குற்றச்சாட்டில் சிறை யில் வந்த பின்பு தனது தந்தை சந்திரசேகர ராவுக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். பிஆர்எஸ் கட்சியை பலவீனப்படுத்துகி றார்கள்; பாஜகவுடன் இணைக்க முயற்சி சதி நடக்கிறது எனக் கடிதத்தில் கூறி இருந்தேன். ஆனால் இந்த கடிதம் கசிந்தது. இந்த கடிதத்தை கசியவிட்டது யார் என்று தெரியவில்லை. ஆனால் வேண்டுமென்றே கட்சி யில் சிலர் கசியவிட்டுள்ளனர். பிஆர்எஸ் கட்சியை பாஜக வுடன் இணைக்க தனது சகோ தரர் கே.டி.ராமாராவ் முயற்சி மேற்கொண்டு வருகிறார். இத னால் சிலர் எனக்கு எதிராக மோச மான செய்திகள் பரப்பரப்படு கிறது. தன்னை அவமதிக்க பணம் கொடுத்து சிலரை செயல் பட வைக்கின்றனர். இந்த கடி தத்தை வெளியே கசியவிட்ட வர்களை முதலில் அம்பலப் படுத்த வேண்டும். அதே போல எக்காரணத்தை கொண்டும் பாஜகவுடன் இணக்கமாக செயல்படமாட்டேன். உயிரு டன் இருக்கும் வரை பிஆர்எஸ் கட்சியை பாஜகவுடன் இணைக்க முடியாது. இதனை முன்பு நான் சிறையிலேயே கூறி இருந்தேன். அதனால் பிஆர்எஸ் கட்சி பாஜக வுடன் இணையாது ; இணைய வும் அனுமதிக்க மாட்டேன். இதற்காக பிஆர்எஸ் கட்சி என்ன நடவடிக்கை எடுத்தாலும் தன்னுடைய நிலைப்பாட்டில் இருந்து மாற மாட்டேன்” என கூறியுள்ளார். இத்தகைய சூழலில் கவிதா வின் பேச்சுக்குப் பின்னர் சந்திர சேகர ராவ் மகன் கே.டி.ராமா ராவ் தலைமறைவாக இருப்ப தாகவும், பாஜகவில் இணைவ தற்காக அவர் தலைமறைவாக இருப்பதாக செய்திகள் வெளி யாகியுள்ளன. இதனால் தெலுங்கானாவில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
பாஜகவின் பிடியில் பிஆர்எஸ், பாமக
தென்னிந்தியாவில் நேரடியாக ஆட்சிக்கு வர முடியாத பாஜக மாநில கட்சிகள் மற்றும் ஓரளவு வாக்கு வங்கிகள் கொண்ட கட்சிகளை குறிவைத்து, குடும்ப பிரச்சனையை ஏற்படுத்தி மற்றும் பயன்படுத்தி கட்சியை உடைக்கும் வேலையை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றன. பாஜகவின் இதுபோன்ற சதித்திட்டத்தில் நாடு முழுவதும் 12க்கும் மேற்பட்ட கட்சிகள் சிதறியுள்ளன. இந்நிலையில், தற்போது இரண்டு பெரிய கட்சிகள் பாஜகவின் பிடியில் சிக்கியுள்ளன. ஒன்று தமிழ்நாட்டின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக). மற்றொன்று சந்திர சேகராவின் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) ஆகும். இரண்டு கட்சிகளிலும் குடும்ப பிரச்சனைக்கு பாஜக தான் காரணம் ஆகும். பிஆர்எஸ், பாமக ஆகிய கட்சி கள் எப்பொழுது வேண்டுமானாலும் இரண்டாக உடைய லாம் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
பிளவை ஏற்படுத்த முயற்சி பாஜகவுக்கு தேஜ் பிரதாப் மறைமுக எச்சரிக்கை
காதல் விவகாரம் தொடர்பாக ராஷ்டிரிய ஜனதாதள கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தேஜ் பிரதாப் கடந்த வாரம் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,”ஆர்ஜேடி தலைவ ராக இருக்கும் என் தம்பி தேஜஸ்விக்கும் எனக்கும் இடையே துரோகிகள் பிளவை ஏற்படுத்த முயல்கின்றனர். இதில் கனவு காண்பவர்கள் ஒருபோதும் வெற்றி பெற மாட்டார்கள். இந்த சதித்திட்டத்தையும் நான் விரைவில் அம்பலப்படுத்துவேன்” என பாஜகவிற்கு மறைமுறைகமாக எச் சரிக்கை விடுத்துள்ளார்.