தெலுங்கானா முதல்வரும், பார திய ராஷ்டிரிய சமிதி கட்சி யின் தலைவருமான சந்திர சேகர் ராவ் திங்க ளன்று மஹ்பூபா மாவட்டத்தில் உள்ள தேவரகத்ரா, மக்டல், நாராயணபேட், கட்வாலா ஆகிய 4 சட்டமன்ற தொகுதி களில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள எர்வள்ளியில் உள்ள தனது பண்ணை வீட்டில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டார். ஹெலிகாப்டர் பறந்த சில நிமிடங்களிலேயே தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டு தள்ளாட, உட னடியாக அதை தரையிறக்கினார் விமானி. பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்ட நிலையில், வேறு ஹெலிகாப்டர் ஏற் பாடு செய்யப்பட்டதையடுத்து, சந்திர சேகரராவ் தேர்தல் பிரச்சாரத்திற்கு தாமத மாக புறப்பட்டுச் சென்றார். மாநில முதல் வர் சென்ற ஹெலிகாப்டர் அவசர அவசர மாக தரையிறக்கப்பட்ட சம்பவம் தெலுங் கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.