states

img

குந்தைகளிடம் விஷத்தை விதைத்த சிபிஎஸ்இ வினாத்தாள்

புதுதில்லி, டிச.13 - பெண்களுக்கு சுதந்திரம் வழங்கி யதே பல்வேறு சமூக கேடுகளுக்கு கார ணம் என்று சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு வினாத்தாளில் இடம்பெற்ற கருத்துக் கள் கடும் விமர்சனத்திற்கும் கண்ட னத்திற்கும் உள்ளாகி இருக்கிறது.  அண்மையில், சிபிஎஸ்இ (Central Board of Secondary Education - CBSE) பத்தாம் வகுப்பு மாணவர் களுக்கான ஆங்கிலத் தேர்வு நடை பெற்றது. இதற்கு தயாரிக்கப்பட்ட வினாத்தாளில், குடும்ப ஒழுக்கம் குறித்த சிறுகட்டுரை ஒன்று (English comprehension passage) வழங்கப் பட்டு, மாணவர்கள் அதைப் படித்து கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு கூறப்பட்டுள்ளது. அந்தக் கட்டுரை யில்தான், பெண் விடுதலைக்கு எதி ரான பிற்போக்குத்தனமான கருத்துக் கள் இடம்பெற்று, விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது.

“மனைவிகள் தங்கள் கணவர் களுக்குக் கீழ்ப்படிவதை நிறுத்தி விட்டார்கள், அதுவே குழந்தைகள் மற்றும் வேலைக்காரர்கள் ஒழுக்க மில்லாமல் போனதற்கு முக்கியக் கார ணம். பெண்கள் சுதந்திரம் பெறுவது பலவிதமான சமூக மற்றும் குடும்ப பிரச்சனைகளுக்கு முக்கிய காரண மாக உள்ளது. மனைவியின் விடு தலை, குழந்தைகளின் மீதான பெற் றோரின் அதிகாரத்தை அழித்துவிட் டது. கணவனுக்கு கீழ்ப்படிந்து நடக் காத பெண், தனது குழந்தைகளுக்கு வலியுறுத்த முயலும் கீழ்ப்படிதலுக்கு உதாரணம் காட்ட முடியவில்லை.

ஒரு மனிதனை அவனது பீடத்திலிருந்து கீழே இறக்கியதன் மூலம் மனைவி யும் தாயும் ஒழுக்கத்தின் வழிமுறை களை மதிப்பிழக்கச் செய்து விட்ட னர்.” - இதுதான் சிபிஎஸ்இ வினாத் தாளில் இடம்பெற்ற கருத்துக்களாகும்.  இதனை மாணவர்கள் படித்துப் பார்த்து, அதனடிப்படையில் “குழந்தை களின் ஒழுங்கீனத்திற்கு யார் கார ணம்; வீட்டில் ஒழுக்கம் சீர்கெட எது காரணம், வீட்டில் குழந்தைகள் பணி யாளர்களுக்கான இடம் என்ன?” என்பன போன்ற கேள்விகளுக்கு பதி லளிக்க வேண்டும் என்று கூறப்பட் டுள்ளது. அதுமட்டுமல்லாமல், பெண் களுக்கு எதிரான இந்த கட்டுரைக்கு, மாணவர்களே பொருத்தமான தலைப்பை இடுமாறும் குறிப்பிடப் பட்டு உள்ளது. இது தற்போது கல்வியாளர்கள், எழுத்தாளர்கள்,

அரசியல் கட்சித் தலைவர்களின் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. மாணவர்களின் உளவியலில் பாதிப்பை ஏற்படுத்தும் இதுபோன்ற கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர்கள் கூறியுள்ளனர். “வினாத்தாளில் இடம்பெற்றதை நம்ப முடியவில்லை. இதைத்தான் நாம் குழந்தைகளுக்கு சொல்லித் தரு கிறோமா? பெண்கள் மீதான பிற் போக்குத்தனமான கருத்துக்களை பாஜக அரசு ஆமோதிக்கிறது என்பதே இதன்மூலம் தெளிவாகிறது” என்று கூறியுள்ள காங்கிரஸ் பொதுச்செய லாளர் பிரியங்கா காந்தி, “இதை ஏன் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் வைத்துள் ளார்கள்?” என்ற கேள்வியை எழுப்பி, அந்த வினாத்தாளை, டுவிட்டரில் பிரதமர் நரேந்திர மோடிக்கு டேக் செய்துள்ளார்.