states

விலைவாசி உயர்வு, வேலையின்மை, ஊழலை எதிர்த்து இந்தியா கூட்டணி நாடு தழுவியப் பிரச்சாரம்!

புதுதில்லி, செப். 14 - விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், மோடி அரசின் ஊழல்களை அம்பலப்படுத்தும் வகை யில், நாடு முழுவதும் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்களை முன்னெடுப்பதென ‘இந்தியா’ கூட்டணியின் ஒருங்கி ணைப்பு மற்றும் தேர்தல் வியூகக் குழு முடிவு செய்துள்ளது. நாடு தழுவிய அளவில் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த மோடி அரசை வலியுறுத்துவது என்றும் ‘இந்தியா’ கூட்டணி தீர்மானித்துள்ளது. ‘இந்தியா’ கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தேர்தல் வியூக குழுவின் முதலாவது கூட்டம், தேசியவாத காங்கிரஸ் தலைவரான சரத் பவாரின் புதுதில்லி இல்லத்தில், புதன்கிழமையன்று (செப். 13) மாலை 4.30 மணிக்கு துவங்கியது. இதில், சரத் பவார் (என்சிபி), கே.சி. வேணுகோபால் (காங்கிரஸ்), டி.ஆர். பாலு (திமுக), தேஜஸ்வி (ஆர்ஜேடி), சஞ்சய் ராவத் (சிவசேனா யுபிடி), சஞ்சய் ஜா (ஜேடியு), ஹேமந்த் சோரன் (ஜேஎம்எம்), ராகவ் சத்தா (ஏஏபி), து. ராஜா (சிபிஐ), உமர் அப்துல்லா (தேசிய மாநாடு), மெக பூபா முப்தி (பிடிபி) ஜாவேத் அலி (சமாஜ்வாதி கட்சி) ஆகியோர் உட்பட 12 பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அமலாக்கத்துறை விசாரணை காரண மாக அபிஷேக் பானர்ஜி (திரிணாமுல்) கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. சிபிஎம் பிரதிநிதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்தக் கூட்டத்திற்குப் பின், கூட்டறிக்கையை வெளியிட்டு, கே.சி. வேணுகோபால் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, “இந்தியா கூட்டணிக்குள் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுக்களை விரைவாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டணியில் உள்ள கட்சிகள் இதுதொடர்பாக, அந்தந்த மாநிலத்தில் பேச்சு நடத்தி, மிக விரைவில் தொகுதிப் பங்கீட்டை முடிவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். “நாட்டின் பல்வேறு பகுதிகளில் கூட்டணியின் கூட்டுப் பொதுக்கூட்டங்கள் நடத்த ஒருங்கிணைப்பு குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி முதல் கூட்டம் அக்டோபர் முதல் வாரத்தில் மத்தியப்பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் நடத்த திட்ட மிட்டுள்ளோம். அதில், பாஜக அரசின் தவறான கொள்கைகளால் நாட்டில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், ஊழல் பிரச்ச னைகளை எழுப்புவோம். மேலும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தவும் ஒன்றிய அரசை வலி யுறுத்த முடிவு செய்துள்ளோம்” என்று அவர் கூறி னார். இந்தியா கூட்டணியின் அனைத்துக் கட்சிகளும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை ஆத ரிக்கின்றனவா? என்ற கேள்விக்கு, “இன்றைய கூட்டத் தில் கலந்து கொண்டவர்களுக்கு ஒருமித்த கருத்து இருந்தது. மற்றவர்களிடமும் நாங்கள் பேசுவோம்” என்று கே.சி. வேணுகோபால் பதிலளித்தார். குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான திமுக மூத்த தலைவர் டி.ஆர். பாலு, பேட்டியின்போது கூறுகையில், போபால், பாட்னா, நாக்பூர், கவுகாத்தி, தில்லி, சென்னை என மொத்தம் 6 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.