states

img

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு எதிரான வழக்கு

கூடுதல் தலைமைச் செயலாளர், ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புதுதில்லி, நவ.20- கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப் பட்ட மசோதாக்களை நியாயமற்ற முறை யில் தடுத்து நிறுத்தியதாக, ஆளுநர் ஆரிப் முகமது கான் மீது, கேரள அரசு தாக்கல் செய்த ரிட் மனு மீது, ஆளுநரை தவிர, மற்ற எதிர் தரப்பினருக்கு, உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த வழக்கில் இரண்டாவது எதிர் தரப்பான ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளருக்கும் ஒன்றிய அரசுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த மனு  வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரு கிறது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மனுவை பரி சீலிக்கும் போது ஆஜராகுமாறு அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கிட ரமணி மற்றும் சொலி சிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகி யோருக்கு உத்தரவிட்டது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட எட்டு மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்துள்ளார். இந்த வழக்கை அரசு சார்பில் தலைமைச் செயலாளரும், சட்ட மன்ற உறுப்பினர் டி.பி.ராமகிருஷ்ணனும் தாக்கல் செய்திருந்தனர். முன்னாள் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜரானார். முடிவு செய்யப்படாத மூன்று மசோதாக்கள் ஏற்கனவே அரசாணைகளாக மாறிய நிலையில் அவை ஆளுநரால் கையொப்பமிடப்பட்டவை என்று கே.கே.வேணுகோபால் சுட்டிக்காட்டினார். மேலும், மசோதாக்கள் மீது கோரப்பட்ட விளக்கத்தை அரசு அளிக்கவில்லை என்கிற  ஆளுநரின் வாதத்தை மறுக்கும் ஆவ ணங்களையும் மாநில அரசு சமர்ப்பித்துள் ளது. முதல்வர் உள்ளிட்டோர் ஆளுநரிடம் அளித்த சுமார் 15 கடிதங்கள் கூடுதல் வாக்கு மூல ஆவணங்களாக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு ஒப்படைத்தது. அட்வகேட் ஜென ரல் கே.கோபாலகிருஷ்ண குருப், ஸ்டாண்டிங் கவுன்சல் சி.கே.சசி ஆகியோ ரும் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகினர்.