states

img

பஞ்சாப் துணை முதல்வரை ‘மோடி வாழ்க’ என கோஷமிட வைத்த பாஜக-வினர்!

சண்டிகர், ஜன. 8 - பஞ்சாப் மாநிலம் பெரோஸ் பூருக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, மாநில காங்கிரஸ் அரசு உரிய பாதுகாப்பு வழங்க வில்லை என்ற பிரச்சாரத்தை பாஜக-வினர் கையில் எடுத்துள் ளனர். நாட்டின் பிரதமருக்கே பாதுகாப்பு இல்லையா? என்று  அவர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இதனிடையே, பிரதமர் மோடி சுமார் 20 நிமிடங்கள் காருக்குள்ளேயே முடங்க வேண்டிய சூழலை ஏற்படுத்திய காங்கிரசுக்கு பதிலடி கொடுக் கிறோம் என்ற பெயரில், பஞ்சாப் துணை முதல்வர் ஓ.பி. சோனி யை சுமார் 40 நிமிடங்கள் சிறைப் பிடித்து பாஜக-வினர் அராஜ கம் செய்துள்ளனர். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து  கொள்வதற்காக வந்து கொண்டிருந்த பஞ்சாப் துணை முதல்வர் ஓ.பி.சோனியின் கான்வாயை இரண்டு நாட் களுக்கு முன்பு பெரோஸ்பூரில் தடுத்து நிறுத்திய பாஜக-வினர், ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிட்டபடி சுற்றி வளைத்துள்ளனர். சுமார் 40 நிமி டங்கள் அவரை நகர விடாமல் காருக்குள்ளே சிறைப்பிடித்த பாஜக-வினர், ‘பிரதமர் மோடி வாழ்க!’ என்று கூறினால் மட்டுமே விடுவோம் என்றும் பிடிவாதம் பிடித்துள்ளனர். காவல்துறையினர் பாது காப்புக்கு இருந்தாலும், பிரச்ச னை வேண்டாம் என்று கருதிய துணைமுதல்வர் ஓ.பி. சோனி அவர்கள் கூறியபடி காரின் கத வைத் திறந்து, பாஜக-வினரைப் பார்த்து கையை உயர்த்தி “மோடி வாழ்க!” என்று கோஷ மிட்டுள்ளார். இதற்குப் பிறகே, துணைமுதல்வர் ஓ.பி. சோனி க்கு, பாஜக-வினர் வழிவிட்டுள் ளனர். இந்த சம்பவம் தொடர் பான வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.