புதுதில்லி, ஜூலை 31- பொதுத்துறையைச் சேர்ந்த கனரா வங்கியின் ஜூன் காலாண்டு லாபம் 71.7 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து அந்த வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான எல்.வி. பிரபாகர் அண்மையில் கூறியிருப்பதாவது: 2022-23 நிதியாண்டின் முதல் காலா ண்டில் (ஏப்ரல் - ஜூன்) பொதுத்துறை யைச் சேர்ந்த கனரா வங்கியின் லாபம் 71.7 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடன் வளர்ச்சி மற்றும் வட்டி வருமானம் அதிகரிப்பு ஆகியவற்றின் உதவியால் நிகழ் நிதியாண்டின் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் வங்கியின் வரிக்குப் பிந்தைய தனிப்பட்ட நிகர லாபம் ரூ. 2,022 கோடியாக இருந்தது.
இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபம் ரூ. ஆயிரத்து 177 கோடியே 50 லட்சத்துடன் ஒப்பிடுகையில் 71.7 சதவிகிதம் அதிகம். நிகர வட்டி வருமானம் ரூ. 6 ஆயிரத்து 160 கோடியிலிருந்து 10.15 சதவிகிதம் வளர்ச்சி கண்டு ரூ. 6 ஆயிரத்து 785 கோடியாகி உள்ளது. வட்டி சாரா வரு மானம் 24.55 சதவிகிதம் உயர்ந்து ரூ. 5 ஆயிரத்து 175 கோடியைத்தொட்டுள்ளது. மொத்த வராக்கடன் 8.50 சதவிகிதத்தி லிருந்து 6.98 சதவிகிதமாகவும், நிகர வராக்கடன் 3.46 சதவிகிதத்திலிருந்து 2.48 சதவிகிதமாகவும் குறைந்துள்ளது. அடையாளம் காணப்பட்ட ரூ. 2 ஆயிரத்து 300 கோடி வராக் கடன் தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனத்துக்கு (என்ஏஆர்சிஎல்) மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு எல்.வி. பிரபாகர் தெரி வித்துள்ளார்.